தொடக்கம் | ||
30. திருப்புகலி - தக்கராகம்
|
||
316. |
விதி ஆய், விளைவு ஆய், விளைவின் பயன் ஆகி, கொதியா வரு கூற்றை உதைத்தவர் சேரும் பதி ஆவது பங்கயம் நின்று அலர, தேன் பொதி ஆர் பொழில் சூழ் புகலி நகர்தானே. |
உரை |
317. |
ஒன்னார் புரம் மூன்றும் எரித்த ஒருவன் மின் ஆர் இடையாளொடும் கூடிய வேடம் தன்னால் உறைவு ஆவது தண்கடல் சூழ்ந்த பொன் ஆர் வயல் பூம் புகலி நகர்தானே. |
உரை |
318. |
வலி இல் மதி செஞ்சடை வைத்த மணாளன், புலியின் அதள் கொண்டு அரை ஆர்த்த புனிதன், மலியும் பதி மா மறையோர் நிறைந்து ஈண்டிப் பொலியும் புனல் பூம் புகலி நகர்தானே. |
உரை |
319. |
கயல் ஆர் தடங்கண்ணியொடும் எருது ஏறி அயலார் கடையில் பலி கொண்ட அழகன் இயலால் உறையும் இடம் எண் திசையோர்க்கும் புயல் ஆர் கடல் பூம் புகலி நகர்தானே. |
உரை |
320. |
காது ஆர் கன பொன் குழை தோடு அது இலங்க, தாது ஆர் மலர் தண் சடை ஏற முடித்து, நாதான் உறையும் இடம் ஆவது நாளும் போது ஆர் பொழில் பூம் புகலி நகர்தானே. |
உரை |
321. |
வலம் ஆர் படை மான் மழு ஏந்திய மைந்தன், கலம் ஆர் கடல் நஞ்சு அமுது உண்ட கருத்தன், குலம் ஆர் பதி கொன்றைகள் பொன் சொரிய, தேன் புலம் ஆர் வயல் பூம் புகலி நகர்தானே. |
உரை |
322. |
கறுத்தான், கனலால் மதில் மூன்றையும் வேவ; செறுத்தான், திகழும் கடல் நஞ்சு அமுது ஆக; அறுத்தான், அயன்தன் சிரம் ஐந்திலும் ஒன்றை; பொறுத்தான்; இடம் பூம் புகலி நகர்தானே. |
உரை |
323. |
தொழிலால் மிகு தொண்டர்கள் தோத்திரம் சொல்ல, எழில் ஆர் வரையால் அன்று அரக்கனைச் செற்ற கழலான் உறையும் இடம் கண்டல்கள் மிண்டி, பொழிலால் மலி பூம் புகலி நகர்தானே. |
உரை |
324. |
மாண்டார் சுடலைப் பொடி பூசி, மயானத்து ஈண்டா, நடம் ஆடிய ஏந்தல், தன் மேனி நீண்டான் இருவர்க்கு எரி ஆய், அரவு ஆரம் பூண்டான், நகர் பூம் புகலி நகர்தானே. |
உரை |
325. |
உடையார் துகில் போர்த்து உழல்வார், சமண்கையர், அடையாதன சொல்லுவர் ஆதர்கள் ஓத்தைக் கிடையாதவன் தன் நகர் நல் மலி பூகம் புடை ஆர்தரு பூம் புகலி நகர்தானே. |
உரை |
326. |
இரைக்கும் புனல் செஞ்சடை வைத்த எம்மான் தன்- புரைக்கும் பொழில் பூம் புகலி நகர் தன் மேல் உரைக்கும் தமிழ் ஞானசம்பந்தன் ஒண் மாலை வரைக்கும் தொழில் வல்லவர் நல்லவர் தாமே. |
உரை |