தொடக்கம் | ||
32. திருஇடைமருதூர் - தக்கராகம்
|
||
338. |
ஓடே கலன்; உண்பதும் ஊர் இடு பிச்சை; காடே இடம் ஆவது; கல்லால் நிழல் கீழ் வாடா முலை மங்கையும் தானும் மகிழ்ந்து, ஈடா உறைகின்ற இடை மருது ஈதோ. |
உரை |
339. |
தடம் கொண்டது ஒரு தாமரைப் பொன் முடி தன் மேல் குடம் கொண்டு அடியார் குளிர் நீர் சுமந்து ஆட்ட, படம் கொண்டது ஒரு பாம்பு அரை ஆர்த்த பரமன் இடம் கொண்டு இருந்தான் தன் இடை மருது ஈதோ. |
உரை |
340. |
வெண் கோவணம் கொண்டு, ஒரு வெண் தலை ஏந்தி, அம் கோல்வளையாளை ஒரு பாகம் அமர்ந்து, பொங்கா வரு காவிரிக் கோலக் கரைமேல், எம் கோன் உறைகின்ற இடைமருது ஈதோ. |
உரை |
341. |
அந்தம் அறியாத அருங் கலம் உந்திக் கந்தம் கமழ் காவிரிக் கோலக் கரை மேல், வெதபொடிப் பூசிய வேத முதல்வன்- எந்தை உறைகின்ற இடைமருது ஈதோ. |
உரை |
342. |
வாசம் கமழ் மா மலர்ச் சோலையில் வண்டே தேசம் புகுந்து ஈண்டி ஒரு செம்மை உடைத்து ஆய், பூசம் புகுந்து ஆடிப் பொலிந்து அழகு ஆய ஈசன் உறைகின்ற இடைமருது ஈதோ. |
உரை |
343. |
வன் புற்று இள நாகம் அசைத்து, அழகு ஆக என்பில் பலமாலையும் பூண்டு, எருது ஏறி, அன்பில் பிரியாதவளோடும் உடன் ஆய் இன்பு உற்று இருந்தான் தன் இடைமருது ஈதோ. |
உரை |
344. |
தேக்கும் திமிலும் பலவும் சுமந்து உந்தி, போக்கிப் புறம், பூசல் அடிப்ப வருமால் ஆர்க்கும் திரைக் காவிரிக் கோலக் கரைமேல் ஏற்க இருந்தான் தன் இடைமருது ஈதோ. |
உரை |
345. |
பூ ஆர் குழலார் அகில்கொண்டு புகைப்ப, ஓவாது அடியார் அடி உள் குளிர்ந்து ஏத்த, ஆவா! அரக்கன் தனை ஆற்றல் அழித்த ஏ ஆர் சிலையான் தன் இடை மருது ஈதோ. |
உரை |
346. |
முற்றாதது ஒரு பால்மதி சூடும் முதல்வன், நல் தாமரையானொடு மால் நயந்து ஏத்த, பொன்-தோளியும் தானும் பொலிந்து அழகு ஆக எற்றே உறைகின்ற இடை மருது ஈதோ. |
உரை |
347. |
சிறு தேரரும் சில் சமணும் புறம் கூற, நெறியே பல பத்தர்கள் கை தொழுது ஏத்த, வெறியா வரு காவிரிக் கோலக் கரைமேல் எறி ஆர் மழுவாளன் இடை மருது ஈதோ. |
உரை |
348. |
கண் ஆர் கமழ் காழியுள் ஞானசம்பந்தன் எண் ஆர் புகழ் எந்தை இடைமருதின்மேல் பண்ணோடு இசை பாடிய பத்தும் வல்லார்கள் விண்ணோர் உலகத்தினில் வீற்றிருப்பாரே. |
உரை |