தொடக்கம் | ||
35. திருவீழிமிழலை - தக்கராகம்
|
||
371. |
அரை ஆர் விரி கோவண ஆடை, நரை ஆர் விடை ஊர்தி, நயந்தான், விரை ஆர் பொழில், வீழி மிழலை உரையால் உணர்வார் உயர்வாரே. |
உரை |
372. |
புனைதல் புரி புன்சடை தன் மேல் கனைதல் ஒரு கங்கை கரந்தான், வினை இல்லவர், வீழி மிழலை நினைவு இல்லவர் நெஞ்சமும் நெஞ்சே? |
உரை |
373. |
அழ வல்லவர், ஆடியும் பாடி எழ வல்லவர், எந்தை அடிமேல் விழ வல்லவர், வீழி மிழலை தொழ வல்லவர், நல்லவர்; தொண்டே! |
உரை |
374. |
உரவம் புரி புன் சடை தன்மேல் அரவம் அரை ஆர்த்த அழகன், விரவும் பொழில், வீழி மிழலை பரவும்(ம்) அடியார் அடியாரே! |
உரை |
375. |
கரிது ஆகிய நஞ்சு அணி கண்டன், வரிது ஆகிய வண்டு அறை கொன்றை விரி தார் பொழில், வீழி மிழலை உரிதா நினைவார் உயர்வாரே. |
உரை |
376. |
சடை ஆர் பிறையான், சரி பூதப் படையான், கொடி மேலது ஒரு பைங்கண் விடையான், உறை வீழி மிழலை அடைவார் அடியார் அவர் தாமே. |
உரை |
377. |
செறி ஆர் கழலும் சிலம்பு ஆர்க்க நெறி ஆர் குழலாளொடு நின்றான், வெறி ஆர் பொழில், வீழி மிழலை அறிவார் அவலம் அறியாரே. |
உரை |
378. |
உளையா வலி ஒல்க, அரக்கன், வளையா விரல் ஊன்றிய மைந்தன், விளை ஆர் வயல், வீழி மிழலை அளையா வருவார் அடியாரே. |
உரை |
379. |
மருள் செய்து இருவர் மயல் ஆக அருள் செய்தவன், ஆர் அழல் ஆகி வெருள் செய்தவன், வீழி மிழலை தெருள் செய்தவர் தீவினை தேய்வே. |
உரை |
380. |
துளங்கும் நெறியார் அவர் தொன்மை வளம் கொள்ளன்மின், புல் அமண் தேரை! விளங்கும் பொழில் வீழி மிழலை உளம் கொள்பவர் தம் வினை ஓய்வே. |
உரை |
381. |
நளிர் காழியுள் ஞானசம்பந்தன் குளிர் ஆர் சடையான் அடி கூற, மிளிர் ஆர் பொழில், வீழி மிழலை கிளர் பாடல் வல்லார்க்கு இலை, கேடே. |
உரை |