தொடக்கம் | ||
36. திருஐயாறு - தக்கராகம்
|
||
382. |
கலை ஆர் மதியோடு உர நீரும் நிலை ஆர் சடையார் இடம் ஆகும் மலை ஆரமும் மா மணி சந்தோடு அலை ஆர் புனல் சேரும் ஐயாறே. |
உரை |
383. |
மதி ஒன்றிய கொன்றை வடத்தன், மதி ஒன்ற உதைத்தவர் வாழ்வு மதியினொடு சேர் கொடி மாடம் மதியம் பயில்கின்ற ஐயாறே. |
உரை |
384. |
கொக்கின் இறகினொடு வன்னி புக்க சடையார்க்கு இடம் ஆகும் திக்கின் இசை தேவர் வணங்கும் அக்கின் அரையாரது ஐயாறே. |
உரை |
385. |
சிறை கொண்ட புரம் அவை சிந்தக் கறை கொண்டவர் காதல் செய் கோயில் மறை கொண்ட நல் வானவர் தம்மில் அறையும் ஒலி சேரும் ஐயாறே. |
உரை |
386. |
உமையாள் ஒரு பாகம் அது ஆகச் சமைவார் அவர் சார்வு இடம் ஆகும் அமையார் உடல் சோர்தரு முத்தம் அமையா வரும் அம் தண் ஐயாறே. |
உரை |
387. |
தலையின் தொடை மாலை அணிந்து கலை கொண்டது ஒரு கையினர் சேர்வு ஆம் நிலை கொண்ட மனத்தவர் நித்தம் மலர் கொண்டு வணங்கும் ஐயாறே. |
உரை |
388. |
வரம் ஒன்றிய மா மலரோன் தன் சிரம் ஒன்றை அறுத்தவர் சேர்வு ஆம் வரை நின்று இழி வார் தரு பொன்னி அரவம் கொடு சேரும் ஐயாறே. |
உரை |
389. |
வரை ஒன்று அது எடுத்த அரக்கன் சிரம் மங்க நெரித்தவர் சேர்வு ஆம் விரையின் மலர் மேதகு பொன்னித் திரை தன்னொடு சேரும் ஐயாறே. |
உரை |
390. |
சங்கக் கயனும் அறியாமை பொங்கும் சுடர் ஆனவர் கோயில் கொங்கில் பொலியும் புனல் கொண்டு அங்கிக்கு எதிர் காட்டும் ஐயாறே. |
உரை |
391. |
துவர் ஆடையர், தோல் உடையார்கள், கவர் வாய்மொழி காதல் செய்யாதே, தவராசர்கள் தாமரையானோடு அவர்தாம் அணை அம் தண் ஐயாறே. |
உரை |
392. |
கலை ஆர் கலிக்காழியர் மன்னன்- நலம் ஆர்தரு ஞானசம்பந்தன்- அலை ஆர் புனல் சூழும் ஐயாற்றைச் சொலும் மாலை வல்லார் துயர் வீடே. |
உரை |