தொடக்கம் | ||
37. திருப்பனையூர் - தக்கராகம்
|
||
393. |
அரவச் சடை மேல் மதி, மத்தம், விரவிப் பொலிகின்றவன் ஊர் ஆம் நிரவிப் பல தொண்டர்கள் நாளும் பரவிப் பொலியும் பனையூரே. |
உரை |
394. |
எண் ஒன்றி நினைந்தவர் தம்பால் உள் நின்று மகிழ்ந்தவன் ஊர் ஆம் கள் நின்று எழு சோலையில் வண்டு பண் நின்று ஒலி செய் பனையூரே. |
உரை |
395. |
அலரும் எறி செஞ்சடை தன் மேல் மலரும் பிறை ஒன்று உடையான் ஊர் சிலர் என்றும் இருந்து அடி பேண, பலரும் பரவும் பனையூரே. |
உரை |
396. |
இடி ஆர் கடல் நஞ்சு அமுது உண்டு பொடி ஆடிய மேனியினான் ஊர் அடியார் தொழ, மன்னவர் ஏத்த, படியார் பணியும் பனையூரே. |
உரை |
397. |
அறை ஆர் கழல் மேல் அரவு ஆட, இறை ஆர் பலி தேர்ந்தவன் ஊர் ஆம் பொறையார் மிகு சீர் விழ மல்க, பறையார் ஒலிசெய் பனையூரே. |
உரை |
398. |
அணியார் தொழ வல்லவர் ஏத்த, மணி ஆர் மிடறு ஒன்று உடையான் ஊர் தணி ஆர் மலர் கொண்டு இரு போதும் பணிவார் பயிலும் பனையூரே. |
உரை |
399. |
அடையாதவர் மூ எயில் சீறும் விடையான், விறல் ஆர் கரியின் தோல் உடையான் அவன், ஒண் பலபூதப் படையான் அவன், ஊர் பனையூரே. |
உரை |
400. |
இலகும் முடிபத்து உடையானை அல்லல் கண்டு அருள் செய்த எம் அண்ணல், உலகில் உயிர் நீர் நிலம் மற்றும் பல கண்டவன், ஊர் பனையூரே. |
உரை |
401. |
வரம் முன்னி மகிழ்ந்து எழுவீர்காள்! சிரம் முன் அடி தாழ வணங்கும் பிரமனொடு மால் அறியாத பரமன் உறையும் பனையூரே! |
உரை |
402. |
அழி வல் அமணரொடு தேரர் மொழி வல்லன சொல்லிய போதும், இழிவு இல்லது ஒரு செம்மையினான் ஊர் பழி இல்லவர் சேர் பனையூரே. |
உரை |
403. |
பார் ஆர் விடையான் பனையூர் மேல் சீர் ஆர் தமிழ் ஞானசம்பந்தன் ஆராத சொல் மாலைகள் பத்தும் ஊர் ஊர் நினைவார் உயர்வாரே. |
உரை |