தொடக்கம் | ||
49. திருநள்ளாறு - பழந்தக்கராகம்
|
||
526. |
போகம் ஆர்த்த பூண் முலையாள் தன்னோடும் பொன் அகலம் பாகம் ஆர்த்த பைங்கண் வெள் ஏற்று அண்ணல், பரமேட்டி, ஆகம் ஆர்த்த தோல் உடையன், கோவண ஆடையின் மேல் நாகம் ஆர்த்த நம்பெருமான், மேயது நள்ளாறே. |
உரை |
527. |
தோடு உடைய காது உடையன், தோல் உடையன், தொலையாப் பீடு உடைய போர் விடையன், பெண்ணும் ஓர்பால் உடையன், ஏடு உடைய மேல் உலகோடு ஏழ்கடலும் சூழ்ந்த நாடு உடைய நம் பெருமான், மேயது நள்ளாறே. |
உரை |
528. |
ஆன் முறையால் ஆற்ற வெண் நீறு ஆடி, அணியிழை ஓர் பால் முறையால் வைத்த பாதம் பத்தர் பணிந்து ஏத்த, மான்மறியும் வெண்மழுவும் சூலமும் பற்றிய கை நால் மறையான், நம்பெருமான், மேயது நள்ளாறே. |
உரை |
529. |
புல்க வல்ல வார்சடைமேல் பூம்புனல் பெய்து, அயலே மல்க வல்ல கொன்றை மாலை மதியோடு உடன் சூடி, பல்க வல்ல தொண்டர் தம் பொன்பாத நிழல் சேர, நல்க வல்ல நம்பெருமான் மேயது நள்ளாறே. |
உரை |
530. |
ஏறு தாங்கி, ஊர்தி பேணி, ஏர் கொள் இளமதியம் ஆறு தாங்கும் சென்னிமேல் ஓர் ஆடு அரவம் சூடி, நீறு தாங்கி நூல் கிடந்த மார்பில் நிரை கொன்றை நாறு தாங்கு நம்பெருமான் மேயது நள்ளாறே. |
உரை |
531. |
திங்கள் உச்சிமேல் விளங்கும் தேவன்-இமையோர்கள், “எங்கள் உச்சி எம் இறைவன்!” என்று அடியே இறைஞ்ச, தங்கள் உச்சியால் வணங்கும் தன் அடியார்கட்கு எல்லாம் நங்கள் உச்சி நம்பெருமான்-மேயது நள்ளாறே. |
உரை |
532. |
வெஞ்சுடர்த் தீ அங்கை ஏந்தி, விண் கொள் முழவு அதிர, அஞ்சு இடத்து ஓர் ஆடல் பாடல் பேணுவது அன்றியும், போய், செஞ்சடைக்கு ஓர் திங்கள் சூடி, திகழ்தரு கண்டத்துள்ளே நஞ்சு அடைத்த நம்பெருமான் மேயது நள்ளாறே. |
உரை |
533. |
சிட்டம் ஆர்ந்த மும்மதிலும் சிலைவரைத் தீ அம்பினால் சுட்டு மாட்டி, சுண்ண வெண் நீறு ஆடுவது அன்றியும், போய்ப் பட்டம் ஆர்ந்த சென்னிமேல் ஓர் பால் மதியம் சூடி, நட்டம் ஆடும் நம்பெருமான் மேயது நள்ளாறே. |
உரை |
534. |
உண்ணல் ஆகா
நஞ்சு கண்டத்து உண்டு, உடனே ஒடுக்கி, “அண்ணல் ஆகா அண்ணல் நீழல் ஆர் அழல் போல் உருவம் எண்ணல் ஆகா, உள் வினை” என்று எள்க வலித்து, இருவர் நண்ணல் ஆகா நம்பெருமான் மேயது நள்ளாறே. |
உரை |
535. |
மாசு மெய்யர், மண்டைத் தேரர், குண்டர் குணம் இலிகள் பேசும் பேச்சை மெய் என்று எண்ணி, அந் நெறி செல்லன்மின்! மூசு வண்டு ஆர் கொன்றை சூடி, மும்மதிலும் உடனே நாசம் செய்த நம் பெருமான் மேயது நள்ளாறே. |
உரை |
536. |
தண்புனலும் வெண்பிறையும் தாங்கிய தாழ்சடையன், நண்பு நல்லார் மல்கு காழி ஞானசம்பந்தன், நல்ல பண்பு நள்ளாறு ஏத்து பாடல் பத்தும் இவை வல்லார் உண்பு நீங்கி, வானவரோடு உலகில் உறைவாரே. |
உரை |
537. |
ஒல்லை ஆறி, உள்ளம் ஒன்றி, கள்ளம் ஒழிந்து, வெய்ய சொல்லை ஆறி, தூய்மை செய்து, காமவினை அகற்றி, நல்ல ஆறே உன்தன் நாமம் நாவில் நவின்று ஏத்த, வல்ல ஆறே வந்து நல்காய் வலிவலம் மேயவனே! |
உரை |
538. |
இயங்குகின்ற இரவி, திங்கள், மற்றும் நல்-தேவர் எல்லாம், பயங்களாலே பற்றி, நின்பால் சித்தம் தெளிகின்றிலர்; தயங்கு சோதி! சாமவேதா! காமனைக் காய்ந்தவனே! மயங்குகின்றேன்! வந்து நல்காய் வலிவலம் மேயவனே! |
உரை |
539. |
பெண்டிர், மக்கள், சுற்றம், என்னும் பேதைப் பெருங்கடலை விண்டு, பண்டே வாழ மாட்டேன்; வேதனை நோய் நலிய, கண்டு கண்டே உன்தன் நாமம் காதலிக்கின்றது, உள்ளம்;- வண்டு கெண்டிப் பாடும் சோலை வலிவலம் மேயவனே! |
உரை |