தொடக்கம் | ||
50. திருவலிவலம் - பழந்தக்கராகம்
|
||
540. |
மெய்யர் ஆகிப் பொய்யை நீக்கி, வேதனையைத் துறந்து, செய்யர் ஆனார் சிந்தையானே! தேவர் குலக்கொழுந்தே! நைவன், நாயேன்; உன்தன் நாமம் நாளும் நவிற்றுகின்றேன்; வையம் முன்னே வந்து நல்காய் வலிவலம் மேயவனே! |
உரை |
541. |
துஞ்சும் போதும் துற்றும் போதும் சொல்லுவன், உன் திறமே; தஞ்சம் இல்லாத் தேவர் வந்து, உன் தாள் இணைக்கீழ்ப் பணிய, நஞ்சை உண்டாய்க்கு என் செய்கேனோ? நாளும் நினைந்து, அடியேன், “வஞ்சம் உண்டு” என்று அஞ்சுகின்றேன்-வலிவலம் மேயவனே! |
உரை |
542. |
“புரிசடையாய்! புண்ணியனே! நண்ணலார் மூஎயிலும் எரிய எய்தாய்! எம்பெருமான்!” என்று இமையோர் பரவும் கரி உரியாய்! காலகாலா! நீலமணி மிடற்று வரி அரவா! வந்து நல்காய் வலிவலம் மேயவனே! |
உரை |
543. |
தாயும் நீயே! தந்தை நீயே! சங்கரனே! அடியேன் ஆயும் நின்பால் அன்பு செய்வான் ஆதரிக்கின்றது, உள்ளம்; ஆயம் ஆய காயம் தன்னுள் ஐவர் நின்று ஒன்றல் ஒட்டார்; மாயமே என்று அஞ்சுகின்றேன்-வலிவலம் மேயவனே! |
உரை |
544. |
நீர் ஒடுங்கும் செஞ்சடையாய்! நின்னுடைய பொன்மலையை வேரொடும் பீழ்ந்து ஏந்தல் உற்ற வேந்தன் இராவணனைத் தேரொடும் போய் வீழ்ந்து அலற, திருவிரலால் அடர்த்த வார் ஒடுங்கும் கொங்கை பங்கா! வலிவலம் மேயவனே! |
உரை |
545. |
ஆதி ஆய நான்முகனும் மாலும் அறிவு அரிய சோதியானே! நீதி இல்லேன் சொல்லுவன், நின் திறமே; ஓதி நாளும் உன்னை ஏத்தும் என்னை வினை அவலம் வாதியாமே வந்து நல்காய் வலிவலம் மேயவனே! |
உரை |
546. |
பொதியிலானே! பூவணத்தாய்! பொன் திகழும் கயிலைப் பதியிலானே! பத்தர் சித்தம் பற்று விடாதவனே! விதி இலாதார் வெஞ்சமணர் சாக்கியர் என்று இவர்கள் மதி இலாதார் என் செய்வாரோ? வலிவலம் மேயவனே! |
உரை |
547. |
வன்னி, கொன்றை, மத்தம், சூடும் வலிவலம் மேயவனைப் பொன்னி நாடன்-புகலி வேந்தன், ஞானசம்பந்தன்-சொன்ன பன்னு பாடல் பத்தும் வல்லார் மெய்த்தவத்தோர் விரும்பும் மன்னு சோதி ஈசனோடே மன்னி இருப்பாரே. |
உரை |