தொடக்கம் | ||
58. திருக்கரவீரம் - பழந்தக்கராகம்
|
||
623. |
அரியும், நம் வினை உள்ளன ஆசு அற வரி கொள் மாமணி போல் கண்டம் கரியவன், திகழும் கரவீரத்து எம் பெரியவன், கழல் பேணவே. |
உரை |
624. |
தங்குமோ, வினை தாழ்சடை மேலவன், திங்களோடு உடன்சூடிய கங்கையான், திகழும் கரவீரத்து எம் சங்கரன், கழல் சாரவே? |
உரை |
625. |
ஏதம் வந்து அடையா, இனி நல்லன பூதம் பல்படை ஆக்கிய காதலான், திகழும் கரவீரத்து எம் நாதன், பாதம் நணுகவே. |
உரை |
626. |
பறையும் நம் வினை உள்ளன பாழ்பட மறையும் மாமணி போல் கண்டம் கறையவன், திகழும் கரவீரத்து எம் இறையவன், கழல் ஏத்தவே. |
உரை |
627. |
பண்ணின் ஆர் மறை பாடலன், ஆடலன், விண்ணின் ஆர் மதில் எய்த முக் கண்ணினான், உறையும் கரவீரத்தை நண்ணுவார் வினை நாசமே. |
உரை |
628. |
நிழலின் ஆர் மதி சூடிய நீள் சடை அழலினார், அனல் ஏந்திய கழலினார், உறையும் கரவீரத்தைத் தொழ வல்லார்க்கு இல்லை, துக்கமே. |
உரை |
629. |
வண்டர் மும்மதில் மாய்தர எய்தவன், அண்டன், ஆர் அழல் போல் ஒளிர் கண்டனார் உறையும் கரவீரத்துத் தொண்டர்மேல் துயர் தூரமே. |
உரை |
630. |
“புனல் இலங்கையர் கோன் முடிபத்து இறச் சின வல் ஆண்மை செகுத்தவன், கனலவன், உறைகின்ற கரவீரம்” என வல்லார்க்கு இடர் இல்லையே. |
உரை |
631. |
வெள்ளத் தாமரையானொடு மாலும் ஆய்த் தெள்ள, தீத்திரள் ஆகிய கள்ளத்தான் உறையும் கரவீரத்தை உள்ளத் தான் வினை ஓயுமே. |
உரை |
632. |
செடி அமணொடு சீவரத்தார் அவர் கொடிய வெவ் உரை கொள்ளேன் மின்! கடியவன் உறைகின்ற கரவீரத்து அடியவர்க்கு இல்லை, அல்லலே. |
உரை |
633. |
வீடு இலான், விளங்கும் கரவீரத்து எம் சேடன் மேல் கசிவால்-தமிழ் நாடும் ஞானசம்பந்தன் சொல் இவை பாடுவார்க்கு இல்லை, பாவமே. |
உரை |