81. சீகாழி - குறிஞ்சி
 
875. நல்லார், தீ மேவும் தொழிலார், நால்வேதஞ்-
சொல்லார், கேண்மையார், சுடர் பொன்கழல் ஏத்த,
வில்லால் புரம் செற்றான் மேவும் பதிபோலும்
கல் ஆர் மதில் சூழ்ந்த காழி நகர்தானே.
உரை
   
876. துளி வண் தேன் பாயும் இதழி, மத்தம்,
தெளி வெண் திங்கள், மாசுணம், நீர் திகழ் சென்னி,
ஒளி வெண் தலைமாலை உகந்தான் ஊர்போலும்
களி வண்டு யாழ் செய்யும் காழி நகர்தானே.
உரை
   
877. ஆலக் கோலத்தின் நஞ்சு உண்டு, அமுதத்தைச்
சாலத் தேவர்க்கு ஈந்து அளித்தான், தன்மையால்
பாலற்கு ஆய் நன்றும் பரிந்து பாதத்தால்
காலற் காய்ந்தான், ஊர் காழி நகர்தானே.
உரை
   
878. இரவில்-திரிவோர்கட்கு இறை தோள் இணைபத்தும்
நிரவி, கர வாளை நேர்ந்தான் இடம் போலும்
பரவித் திரிவோர்க்கும் பால் நீறு அணிவோர்க்கும்
கரவு இல்-தடக்கையார் காழி நகர்தானே.
உரை
   
879. மாலும் பிரமனும் அறியா மாட்சியான்,
தோலும் புரிநூலும் துதைந்த வரைமார்பன்,
ஏலும் பதிபோலும் இரந்தோர்க்கு எந்நாளும்
காலம் பகராதார் காழிந் நகர்தானே.
உரை
   
880. தம் கை இட உண்பார், தாழ் சீவரத்தார்கள்,
பெங்கை உணராதே பேணித் தொழுமின்கள்!
மங்கை ஒருபாகம் மகிழ்ந்தான், மலர்ச் சென்னிக்
கங்கை தரித்தான், ஊர் காழி நகர்தானே.
உரை
   
881. வாசம் கமழ் காழி மதி செஞ்சடை வைத்த
ஈசன் நகர்தன்னை, இணை இல் சம்பந்தன்
பேசும் தமிழ் வல்லோர் பெருநீர் உலகத்துப்
பாசம்தனை அற்றுப் பழி இல் புகழாரே.
உரை