தொடக்கம் | ||
83. திருஅம்பர்மாகாளம் - குறிஞ்சி
|
||
893. |
அடையார் புரம் மூன்றும் அனல்வாய் விழ எய்து, மடை ஆர் புனல் அம்பர்மாகாளம் மேய விடை ஆர் கொடி எந்தை, வெள்ளைப்பிறை சூடும் சடையான், கழல் ஏத்த, சாரா, வினைதானே. |
உரை |
894. |
தேன் ஆர் மதமத்தம் திங்கள் புனல் சூடி, வான் ஆர் பொழில் அம்பர் மாகாளம் மேய, ஊன் ஆர் தலை தன்னில் பலி கொண்டு உழல் வாழ்க்கை ஆனான் கழல் ஏத்த, அல்லல் அடையாவே. |
உரை |
895. |
திரை ஆர் புனலோடு செல்வமதி சூடி, விரை ஆர் பொழில் அம்பர்மாகாளம் மேய, நரை ஆர் விடை ஊரும், நம்பான் கழல் நாளும் உரையாதவர்கள்மேல் ஒழியா, ஊனமே. |
உரை |
896. |
கொந்து அண்
பொழில்-சோலைக் கோல வரிவண்டு, மந்தம், மலி அம்பர்மாகாளம் மேய, கந்தம் கமழ்கொன்றை கமழ் புன்சடை வைத்த, எந்தை கழல் ஏத்த, இடர் வந்து அடையாவே. |
உரை |
897. |
அணி ஆர் மலைமங்கை ஆகம் பாகம் ஆய், மணி ஆர் புனல் அம்பர்மாகாளம் மேய துணி ஆர் உடையினான் துதை பொன்கழல் நாளும் பணியாதவர் தம்மேல் பறையா, பாவமே. |
உரை |
898. |
பண்டு ஆழ்கடல்
நஞ்சை உண்டு, களி மாந்தி, வண்டு ஆர் பொழில் அம்பர்மாகாளம் மேய விண்டார் புரம் வேவ மேருச் சிலை ஆகக் கொண்டான் கழல் ஏத்த, குறுகா, குற்றமே. |
உரை |
899. |
மிளிரும்
அரவோடு வெள்ளைப்பிறை சூடி, வளரும் பொழில் அம்பர்மாகாளம் மேய கிளரும் சடை அண்ணல் கேடு இல் கழல் ஏத்த, தளரும், உறு நோய்கள்; சாரும், தவம்தானே. |
உரை |
900. |
கொலை ஆர் மழுவோடு கோலச்சிலை ஏந்தி, மலை ஆர் புனல் அம்பர்மாகாளம் மேய இலை ஆர் திரிசூலப்படையான் கழல் நாளும் நிலையா நினைவார்மேல் நில்லா, வினைதானே. |
உரை |
901. |
சிறை ஆர் வரிவண்டு தேன் உண்டு இசை பாட, மறையார் நிறை அம்பர்மாகாளம் மேய நறை ஆர் மலரானும் மாலும் காண்பு ஒண்ணா, இறையான் கழல் ஏத்த, எய்தும், இன்பமே. |
உரை |
902. |
மாசு ஊர்
வடிவினார், மண்டை உணல் கொள்வார், கூசாது உரைக்கும் சொல் கொள்கை குணம் அல்ல; “வாசு ஆர் பொழில் அம்பர்மாகாளம் மேய ஈசா!” என்பார்கட்கு இல்லை, இடர்தானே. |
உரை |
903. |
வெருநீர் கொள ஓங்கும் வேணுபுரம் தன்னுள்- திருமாமறை ஞானசம்பந்தன சேண் ஆர் பெருமான் மலி அம்பர்மாகாளம் பேணி உருகா, உரை செய்வார் உயர்வான் அடைவாரே. |
உரை |