தொடக்கம் | ||
84. திருநாகைக்காரோணம் - குறிஞ்சி
|
||
904. |
புனையும்
விரிகொன்றைக் கடவுள், புனல் பாய நனையும் சடைமேல் ஓர் நகுவெண் தலை சூடி, வினை இல் அடியார்கள் விதியால் வழிபட்டு, கனையும் கடல் நாகைக்காரோணத்தானே. |
உரை |
905. |
பெண் ஆண் என நின்ற பெம்மான், பிறைச் சென்னி அண்ணாமலை நாடன், ஆரூர் உறை அம்மான்- மண் ஆர் முழவு ஓவா மாடம் நெடுவீதிக் கண் ஆர் கடல் நாகைக்காரோணத்தானே. |
உரை |
906. |
பாரோர் தொழ,
விண்ணோர் பணிய, மதில்மூன்றும் ஆரார் அழலூட்டி, அடியார்க்கு அருள் செய்தான்; தேர் ஆர் விழவு ஓவாச் செல்வன்-திரை சூழ்ந்த கார் ஆர் கடல் நாகைக்காரோணத்தானே. |
உரை |
907. |
மொழி சூழ் மறை பாடி, முதிரும் சடைதன்மேல் அழி சூழ் புனல் ஏற்ற அண்ணல் அணிஆய பழி சூழ்விலர் ஆய பத்தர் பணிந்து ஏத்த, கழி சூழ் கடல் நாகைக்காரோணத்தானே. |
உரை |
908. |
ஆணும் பெண்ணும்
ஆய் அடியார்க்கு அருள் நல்கி, சேண் நின்றவர்க்கு இன்னம் சிந்தைசெய வல்லான்- பேணி வழிபாடு பிரியாது எழும் தொண்டர் காணும் கடல் நாகைக்காரோணத்தானே. |
உரை |
909. |
ஏனத்து எயிறோடும்
அரவம் மெய் பூண்டு, வானத்து இளந்திங்கள் வளரும் சடை அண்ணல் ஞானத் துறை வல்லார் நாளும் பணிந்து ஏத்த, கானல் கடல் நாகைக்காரோணத்தானே. |
உரை |
910. |
அரை ஆர் அழல்நாகம் அக்கோடு அசைத்திட்டு, விரை ஆர் வரைமார்பின் வெண் நீறு அணி அண்ணல் வரை ஆர்வன போல வளரும் வங்கங்கள் கரை ஆர் கடல் நாகைக்காரோணத்தானே. |
உரை |
911. |
வலம் கொள் புகழ் பேணி, வரையால் உயர் திண்தோள் இலங்கைக்கு இறை வாட அடர்த்து, அங்கு அருள்செய்தான்- பலம் கொள் புகழ் மண்ணில் பத்தர் பணிந்து ஏத்த, கலம் கொள் கடல் நாகைக்காரோணத்தானே. |
உரை |
912. |
திருமால் அடி வீழ, திசை நான்முகன் ஏத்த, பெருமான் என நின்ற பெம்மான்; பிறைச் சென்னிச் செரு மால்விடை ஊரும் செல்வன்-திரை சூழ்ந்த கருமால் கடல் நாகைக்காரோணத்தானே. |
உரை |
913. |
நல்லார்
அறம் சொல்ல, பொல்லார் புறம்கூற, அல்லார் அலர் தூற்ற, அடியார்க்கு அருள்செய்வான்; பல் ஆர் தலைமாலை அணிவான்-பணிந்து ஏத்த, கல் ஆர் கடல் நாகைக்காரோணத்தானே. |
உரை |
914. |
கரை ஆர் கடல் நாகைக்காரோணம் மேய நரை ஆர் விடையானை நவிலும் சம்பந்தன் உரை ஆர் தமிழ்மாலை பாடும் அவர் எல்லாம் கரையா உரு ஆகிக் கலி வான் அடைவாரே. |
உரை |