தொடக்கம் | ||
85. திருநல்லம் - குறிஞ்சி
|
||
915. |
“கல்லால் நிழல் மேய கறை சேர் கண்டா!” என்று எல்லாமொழியாலும் இமையோர் தொழுது ஏத்த, வில்லால் அரண்மூன்றும் வெந்து விழ எய்த நல்லான்; நமை ஆள்வான்-நல்லம் நகரானே. |
உரை |
916. |
தக்கன் பெரு வேள்வி தன்னில் அமரரைத் துக்கம் பல செய்து, சுடர் பொன்சடை தாழ, கொக்கின் இறகோடு குளிர் வெண்பிறை சூடும் நக்கன்; நமை ஆள்வான்-நல்லம் நகரானே. |
உரை |
917. |
அந்திமதியோடும்
அரவச் சடை தாழ, முந்தி அனல் ஏந்தி, முதுகாட்டு எரி ஆடி; சிந்தித்து எழ வல்லார் தீரா வினை தீர்க்கும் நந்தி; நமை ஆள்வான்-நல்லம் நகரானே. |
உரை |
918. |
குளிரும் மதி
சூடிக் கொன்றைச் சடை தாழ, மிளிரும் அரவோடு வெண் நூல் திகழ் மார்பில், தளிரும் திகழ்மேனித் தையல் பாகம் ஆய், நளிரும் வயல் சூழ்ந்த நல்லம் நகரானே. |
உரை |
919. |
மணி ஆர் திகழ் கண்டம் உடையான்; மலர் மல்கு பிணி வார்சடை எந்தை பெருமான்; கழல் பேணித் துணிவு ஆர் மலர்கொண்டு தொண்டர் தொழுது ஏத்த, நணியான்; நமை ஆள்வான்-நல்லம் நகரானே. |
உரை |
920. |
“வாசம் மலர் மல்கு மலையான் மகளோடும் சும் சுடுநீறு புனைந்தான், விரிகொன்றை ஈசன்!” என உள்கி எழுவார் வினைகட்கு நாசன்; நமை ஆள்வான்-நல்லம் நகரானே. |
உரை |
921. |
அம் கோல்வளை மங்கை காண, அனல் ஏந்தி, கொங்கு ஆர் நறுங்கொன்றை சூடி, குழகு ஆக, வெங்காடு இடம் ஆக, வெந்தீ விளையாடும் நம் கோன்; நமை ஆள்வான்-நல்லம் நகரானே. |
உரை |
922. |
பெண் ஆர் திருமேனிப் பெருமான்; பிறை மல்கு கண் ஆர் நுதலினான்; கயிலை கருத்தினால் எண்ணாது எடுத்தானை இறையே விரல் ஊன்றி, நண்ணார் புரம் எய்தான்-நல்லம் நகரானே. |
உரை |
923. |
நாகத்து
அணையானும் நளிர் மா மலரானும் போகத்து இயல்பினால் பொலிய, அழகு ஆகும் ஆகத்தவளோடும் அமர்ந்து, அங்கு அழகு ஆரும் நாகம் அரை ஆர்த்தான்-நல்லம் நகரானே. |
உரை |
924. |
குறி இல்
சமணோடு, குண்டர்வண் தேரர், அறிவு இல் உரை கேட்டு, அங்கு அவமே கழியாதே! பொறி கொள் அரவு ஆர்த்தான்-பொல்லாவினை தீர்க்கும், நறை கொள் பொழில் சூழ்ந்த, நல்லம் நகரானே. |
உரை |
925. |
நலம் ஆர் மறையோர் வாழ் நல்லம் நகர் மேய கொலை சேர் மழுவானை, கொச்சை அமர்ந்து ஓங்கு தலம் ஆர் தமிழ் ஞானசம்பந்தன், சொன்ன கலைகள் இவை வல்லார் கவலை கழிவாரே. |
உரை |