தொடக்கம் | ||
86. திருநல்லூர் - குறிஞ்சி
|
||
926. |
கொட்டும் பறை சீரால் குழும, அனல் ஏந்தி, நட்டம் பயின்று ஆடும் நல்லூர்ப் பெருமானை முட்டு இன்று இருபோதும், முனியாது எழுந்து, அன்பு- பட்ட மனத்தார்கள் அறியார், பாவமே. |
உரை |
927. |
ஏறில் எருது ஏறும், எழில் ஆயிழையோடும் வேறும் உடனுமாம், விகிர்தர் அவர் என்ன, நாறும் மலர்ப் பொய்கை நல்லூர்ப் பெருமானைக் கூறும் அடியார்கட்கு அடையா, குற்றமே. |
உரை |
928. |
சூடும் இளந்திங்கள் சுடர் பொன்சடை தாழ, ஓடு உண்கலன் ஆக, ஊர் ஊர் இடு பிச்சை நாடும் நெறியானை, நல்லூர்ப் பெருமானைப் பாடும் அடியார்கட்கு அடையா, பாவமே. |
உரை |
929. |
நீத்த நெறியானை,
நீங்காத் தவத்தானை, நாத்த நெறியானை, நல்லூர்ப் பெருமானை, காத்த நெறியானை, கைகூப்பித் தொழுது ஏத்தும் அடியார்கட்கு இல்லை, இடர்தானே. |
உரை |
930. |
ஆகத்து
உமைகேள்வன், அரவச் சடை தாழ நாகம் அசைத்தானை, நல்லூர்ப் பெருமானை, தாகம் புகுந்து அண்மி, தாள்கள் தொழும் தொண்டர் போகம் மனத்தராய், புகழத் திரிவாரே. |
உரை |
931. |
கொல்லும் களியானை உரி போர்த்து, உமை அஞ்ச, நல்ல நெறியானை, நல்லூர்ப் பெருமானை, செல்லும் நெறியானை, சேர்ந்தார் இடர் தீர, சொல்லும் அடியார்கள் அறியார், துக்கமே. |
உரை |
932. |
எங்கள் பெருமானை, இமையோர் தொழுது ஏத்தும் நங்கள் பெருமானை, நல்லூர் பிரிவு இல்லா, தம் கை தலைக்கு ஏற்றி, “ஆள்” என்று அடிநீழல் தங்கும் மனத்தார்கள் தடுமாற்று அறுப்பாரே. |
உரை |
933. |
காமன் எழில்
வாட்டி, கடல் சூழ் இலங்கைக் கோன் நாமம் இறுத்தானை, நல்லூர்ப் பெருமானை, ஏம மனத்தாராய் இகழாது எழும் தொண்டர் தீபமனத்தார்கள்; அறியார், தீயவே. |
உரை |
934. |
வண்ண மலரானும்
வையம் அளந்தானும் நண்ணல் அரியானை, நல்லூர்ப் பெருமானை, தண்ணமலர் தூவித் தாள்கள் தொழுது ஏத்த எண்ணும் அடியார்கட்கு இல்லை, இடுக்கணே. |
உரை |
935. |
பிச்சக்குடை
நீழல் சமணர், சாக்கியர், நிச்சம் அலர் தூற்ற நின்ற பெருமானை, நச்சுமிடற்றானை, நல்லூர்ப் பெருமானை, எச்சும் அடியார்கட்கு இல்லை, இடர்தானே. |
உரை |
936. |
தண்ணம்புனல் காழி ஞானசம்பந்தன், நண்ணும் புனல் வேலி நல்லூர்ப் பெருமானை, வண்ணம் புனை மாலை வைகல் ஏத்துவார் விண்ணும் நிலனும் ஆய் விளங்கும் புகழாரே. |
உரை |