தொடக்கம் | ||
88. திருஆப்பனூர் - குறிஞ்சி
|
||
948. |
முற்றும் சடை முடி மேல் முதிரா இளம்பிறையன், ஒற்றைப் பட அரவம் அது கொண்டு அரைக்கு அணிந்தான், செற்றம் இல் சீரானைத் திரு ஆப்பனூரானைப் பற்றும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே. |
உரை |
949. |
குரவம் கமழ்
குழலாள் குடி கொண்டு நின்று, விண்ணோர் விரவும் திருமேனி, விளங்கும் வளை எயிற்றின் அரவம் அணிந்தானை, அணி ஆப்பனூரானைப் பரவும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே. |
உரை |
950. |
முருகு விரி குழலார் மனம் கொள் அநங்கனை முன் பெரிதும் முனிந்து உகந்தான், பெருமான், பெருங்காட்டின் அரவம் அணிந்தானை, அணி ஆப்பனூரானைப் பரவும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே. |
உரை |
951. |
பிணியும் பிறப்பு
அறுப்பான், பெருமான், பெருங்காட்டில் துணியின் உடை தாழச் சுடர் ஏந்தி ஆடுவான், அணியும் புனலானை, அணி ஆப்பனூரானைப் பணியும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே. |
உரை |
952. |
தகரம் அணி
அருவித் தடமால்வரை சிலையா, நகரம் ஒரு மூன்றும் நலம் குன்ற வென்று உகந்தான், அகரமுதலானை, அணி ஆப்பனூரானைப் பகரும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே. |
உரை |
953. |
ஓடும் திரிபுரங்கள் உடனே உலந்து அவிய, காடு அது இடம் ஆகக் கனல் கொண்டு நின்று இரவில் ஆடும் தொழிலானை, அணி ஆப்பனூரானைப் பாடும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே. |
உரை |
954. |
இயலும் விடை
ஏறி, எரி கொள் மழு வீசி, கயலின் இணைக்கண்ணாள் ஒருபால் கலந்து ஆட, இயலும் இசையானை, எழில் ஆப்பனூரானைப் பயிலும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே. |
உரை |
955. |
கருக்கும் மணிமிடறன்,
கதநாகக்கச்சையினான், உருக்கும் அடியவரை, ஒளிவெண்பிறைசூடி, அரக்கன் திறல் அழித்தான், அணி ஆப்பனூரானைப் பரு(க்)கும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே. |
உரை |
956. |
கண்ணன்,
கடிக் கமல மலர் மேல் இனிது உறையும் அண்ணற்கு அளப்பு அரிது ஆய் நின்று, அங்கு அடியார்மேல் எண் இல் வினை களைவான், எழில் ஆப்பனூரானைப் பண்ணின் இசை பகர்வார் வினை பற்று அறுப்பாரே. |
உரை |
957. |
செய்ய கலிங்கத்தார்,
சிறு தட்டு உடையார்கள், பொய்யர் புறம் கூற, புரிந்த அடியாரை ஐயம் அகற்றுவான், அணி ஆப்பனூரானைப் பைய நினைந்து எழுவார் வினை பற்று அறுப்பாரே. |
உரை |
958. |
அம் தண்புனல்
வைகை அணி ஆப்பனூர் மேய சந்த மலர்க்கொன்றை சடைமேல் உடையானை, நந்தி அடி பரவும் நல ஞானசம்பந்தன் சந்தம் இவை வல்லார் தடுமாற்று அறுப்பாரே. |
உரை |