தொடக்கம் | ||
90. திருப்பிரமபுரம் - திருஇருக்குக் குறள்
|
||
969. |
அரனை உள்குவீர்! பிரமன் ஊருள் எம் பரனையே மனம் பரவி, உய்ம்மினே! |
உரை |
970. |
காண உள்குவீர்! வேணுநல்புரத் தாணுவின் கழல் பேணி, உய்ம்மினே! |
உரை |
971. |
நாதன் என்பிர்காள்! காதல் ஒண் புகல் ஆதிபாதமே ஓதி, உய்ம்மினே! |
உரை |
972. |
அங்கம் மாது சேர் பங்கம் ஆயவன், வெங்குரு மன்னும் எங்கள் ஈசனே. |
உரை |
973. |
வாள் நிலாச் சடைத் தோணிவண்புரத்து ஆணி நன்பொனைக் காணுமின்களே! |
உரை |
974. |
“பாந்தள் ஆர் சடைப் பூந்தராய் மன்னும், ஏந்து கொங்கையாள் வேந்தன்” என்பரே. |
உரை |
975. |
கரிய கண்டனை, சிரபுரத்துள் எம் அரசை, நாள்தொறும் பரவி, உய்ம்மினே! |
உரை |
976. |
நறவம் ஆர் பொழில் புறவம் நல் பதி இறைவன் நாமமே மறவல், நெஞ்சமே! |
உரை |
977. |
தென்றில் அரக்கனைக் குன்றில் சண்பை மன் அன்று நெரித்தவா, நின்று நினைமினே! |
உரை |
978. |
அயனும் மாலும் ஆய் முயலும் காழியான் பெயல்வை எய்தி நின்று இயலும், உள்ளமே. |
உரை |
979. |
தேரர் அமணரைச் சேர்வு இல் கொச்சை மன் நேர் இல் கழல் நினைந்து ஓரும், உள்ளமே. |
உரை |
980. |
தொழு மனத்தவர், கழுமலத்து உறை பழுது இல் சம்பந்தன் மொழிகள் பத்துமே. |
உரை |