90. திருப்பிரமபுரம் - திருஇருக்குக் குறள்
 
969. அரனை உள்குவீர்! பிரமன் ஊருள் எம்
பரனையே மனம் பரவி, உய்ம்மினே!
உரை
   
970. காண உள்குவீர்! வேணுநல்புரத்
தாணுவின் கழல் பேணி, உய்ம்மினே!
உரை
   
971. நாதன் என்பிர்காள்! காதல் ஒண் புகல்
ஆதிபாதமே ஓதி, உய்ம்மினே!
உரை
   
972. அங்கம் மாது சேர் பங்கம் ஆயவன்,
வெங்குரு மன்னும் எங்கள் ஈசனே.
உரை
   
973. வாள் நிலாச் சடைத் தோணிவண்புரத்து
ஆணி நன்பொனைக் காணுமின்களே!
உரை
   
974. “பாந்தள் ஆர் சடைப் பூந்தராய் மன்னும்,
ஏந்து கொங்கையாள் வேந்தன்” என்பரே.
உரை
   
975. கரிய கண்டனை, சிரபுரத்துள் எம்
அரசை, நாள்தொறும் பரவி, உய்ம்மினே!
உரை
   
976. நறவம் ஆர் பொழில் புறவம் நல் பதி
இறைவன் நாமமே மறவல், நெஞ்சமே!
உரை
   
977. தென்றில் அரக்கனைக் குன்றில் சண்பை மன்
அன்று நெரித்தவா, நின்று நினைமினே!
உரை
   
978. அயனும் மாலும் ஆய் முயலும் காழியான்
பெயல்வை எய்தி நின்று இயலும், உள்ளமே.
உரை
   
979. தேரர் அமணரைச் சேர்வு இல் கொச்சை மன்
நேர் இல் கழல் நினைந்து ஓரும், உள்ளமே.
உரை
   
980. தொழு மனத்தவர், கழுமலத்து உறை
பழுது இல் சம்பந்தன் மொழிகள் பத்துமே.
உரை