தொடக்கம் | ||
91. திருஆரூர் - திருஇருக்குக்குறள்
|
||
981. |
சித்தம் தெளிவீர்காள்! அத்தன் ஆரூரைப் பத்தி மலர் தூவ, முத்தி ஆகுமே. |
உரை |
982. |
பிறவி அறுப்பீர்காள்! அறவன் ஆரூரை மறவாது ஏத்துமின்! துறவி ஆகுமே. |
உரை |
983. |
துன்பம் துடைப்பீர்காள்! அன்பன் அணி ஆரூர் நன்பொன்மலர் தூவ, இன்பம் ஆகுமே. |
உரை |
984. |
உய்யல் உறுவீர்காள்! ஐயன் ஆரூரைக் கையினால்-தொழ, நையும், வினைதானே. |
உரை |
985. |
பிண்டம் அறுப்பீர்காள்! அண்டன் ஆரூரைக் கண்டு மலர் தூவ, விண்டு வினை போமே. |
உரை |
986. |
பாசம் அறுப்பீர்காள்! ஈசன் அணி ஆரூர் வாசமலர் தூவ, நேசம் ஆகுமே. |
உரை |
987. |
வெய்ய வினை தீர, ஐயன் அணி ஆரூர் செய்யமலர் தூவ, வையம் உமது ஆமே. |
உரை |
988. |
அரக்கன் ஆண்மையை நெருக்கினான் ஆரூர் கரத்தினால்-தொழ, திருத்தம் ஆகுமே. |
உரை |
989. |
துள்ளும் இருவர்க்கும் வள்ளல் ஆரூரை உள்ளுமவர் தம்மேல் விள்ளும், வினைதானே. |
உரை |
990. |
கடுக் கொள் சீவரை அடக்கினான் ஆரூர் எடுத்து வாழ்த்துவார் விடுப்பர், வேட்கையே. |
உரை |
991. |
சீர் ஊர் சம்பந்தன் ஆரூரைச் சொன்ன பார் ஊர் பாடலார் பேரார், இன்பமே. |
உரை |