93. திருமுதுகுன்றம் - திருஇருக்குக்குறள்
 
1003. நின்று மலர் தூவி, இன்று முதுகுன்றை
நன்றும் ஏத்துவீர்க்கு என்றும் இன்பமே.
உரை
   
1004. அத்தன் முதுகுன்றை, பத்தி ஆகி, நீர்,
நித்தம் ஏத்துவீர்க்கு உய்த்தல் செல்வமே.
உரை
   
1005. ஐயன் முதுகுன்றை, பொய்கள் கெட நின்று,
கைகள் கூப்புவீர்! வையம் உமது ஆமே.
உரை
   
1006. ஈசன் முதுகுன்றை நேசம் ஆகி நீர்
வாசமலர் தூவ, பாசவினை போமே.
உரை
   
1007. மணி ஆர் முதுகுன்றைப் பணிவார் அவர் கண்டீர்,
பிணி ஆயின கெட்டுத் தணிவார், உலகிலே.
உரை
   
1008. “மொய் ஆர் முதுகுன்றில் ஐயா!” என வல்லார்
பொய்யார், இரவோர்க்கு; செய்யாள் அணியாளே.
உரை
   
1009. விடையான் முதுகுன்றை இடையாது ஏத்துவார்
படைஆயின சூழ, உடையார், உலகமே.
உரை
   
1010. பத்துத்தலையோனைக் கத்த, விரல் ஊன்றும்
அத்தன் முதுகுன்றை மொய்த்துப் பணிமினே!
உரை
   
1011. இருவர் அறியாத ஒருவன் முதுகுன்றை
உருகி நினைவார்கள் பெருகி நிகழ்வோரே.
உரை
   
1012. தேரர் அமணரும் சேரும் வகை இல்லான்,
நேர் இல் முதுகுன்றை நீர் நின்று உள்குமே!
உரை
   
1013. நின்று முதுகுன்றை நன்று சம்பந்தன்
ஒன்றும் உரை வல்லார் என்றும் உயர்வோரே.
உரை