தொடக்கம் | ||
95. திருஇடைமருர் - திருஇருக்குக்குறள்
|
||
1025. |
தோடு ஓர் காதினன்; பாடு மறையினன்- காடு பேணி நின்று ஆடும் மருதனே. |
உரை |
1026. |
கருதார் புரம் எய்வர்; எருதே இனிது ஊர்வர்; மருதே இடம் ஆகும்; விருது ஆம், வினை தீர்ப்பே. |
உரை |
1027. |
எண்ணும் அடியார்கள் அண்ணல் மருதரை, பண்ணின் மொழி சொல்ல, விண்ணும் தமது ஆமே. |
உரை |
1028. |
விரி ஆர் சடை மேனி எரி ஆர் மருதரைத் தரியாது ஏத்துவார் பெரியார், உலகிலே. |
உரை |
1029. |
பந்த விடை ஏறும் எந்தை மருதரைச் சிந்தை செய்பவர் புந்தி நல்லரே. |
உரை |
1030. |
கழலும் சிலம்பு ஆர்க்கும் எழில் ஆர் மருதரைத் தொழலே பேணுவார்க்கு உழலும் வினை போமே. |
உரை |
1031. |
பிறை ஆர் சடை அண்ணல் மறை ஆர் மருதரை நிறையால் நினைபவர் குறையார், இன்பமே. |
உரை |
1032. |
எடுத்தான் புயம் தன்னை அடுத்தார் மருதரைத் தொடுத்து ஆர்மலர் சூட்ட, விடுத்தார், வேட்கையே. |
உரை |
1033. |
இருவர்க்கு எரி ஆய உருவம் மருதரைப் பரவி ஏத்துவார் மருவி வாழ்வரே. |
உரை |
1034. |
நின்று உண் சமண், தேரர், என்றும் மருதரை அன்றி உரை சொல்ல, நன்று மொழியாரே. |
உரை |
1035. |
கருது சம்பந்தன், மருதர் அடி பாடி, பெரிதும் தமிழ் சொல்ல, பொருத வினை போமே. |
உரை |