தொடக்கம் | ||
96. திருஅன்னியூர் - திருஇருக்குக்குறள்
|
||
1036. |
மன்னி ஊர் இறை; சென்னியார், பிறை அன்னியூர் அமர் மன்னுசோதியே. |
உரை |
1037. |
பழகும் தொண்டர், வம்! அழகன், அன்னியூர்க் குழகன், சேவடி தொழுது வாழ்மினே! |
உரை |
1038. |
நீதி பேணுவீர்! ஆதி, அன்னியூர்ச் சோதி, நாமமே ஓதி உய்ம்மினே! |
உரை |
1039. |
பத்தர் ஆயினீர்! அத்தர், அன்னியூர்ச் சித்தர், தாள் தொழ முத்தர் ஆவரே. |
உரை |
1040. |
நிறைவு வேண்டுவீர்! அறவன், அன்னியூர் மறை உளான், கழற்கு உறவு செய்ம்மினே! |
உரை |
1041. |
இன்பம் வேண்டுவீர்! “அன்பன், அன்னியூர் நன்பொன்” என்னுமின், உம்பர் ஆகவே! |
உரை |
1042. |
“அந்தணாளர்தம் தந்தை! அன்னியூர் எந்தையே!” என, பந்தம் நீங்குமே. |
உரை |
1043. |
தூர்த்தனைச் செற்ற தீர்த்தன் அன்னியூர் ஆத்தமா அடைந்து, ஏத்தி வாழ்மினே! |
உரை |
1044. |
இருவர் நாடிய அரவன் அன்னியூர் பரவுவார், விண்ணுக்கு ஒருவர் ஆவரே. |
உரை |
1045. |
குண்டர் தேரருக்கு அண்டன் அன்னியூர்த் தொண்டு உளார் வினை விண்டு போகுமே. |
உரை |
1046. |
பூந்தராய்ப் பந்தன் ஆய்ந்த பாடலால், வேந்தன் அன்னியூர் சேர்ந்து, வாழ்மினே! |
உரை |