தொடக்கம் | ||
99. திருக்குற்றாலம் - குறிஞ்சி
|
||
1069. |
வம்பு ஆர் குன்றம், நீடு உயர் சாரல், வளர் வேங்கைக் கொம்பு ஆர் சோலைக் கோல வண்டு யாழ்செய் குற்றாலம் அம் பால் நெய்யோடு ஆடல் அமர்ந்தான், அலர்கொன்றை நம்பான், மேய நன்நகர்போலும்; நமரங்காள்! |
உரை |
1070. |
பொடிகள் பூசித் தொண்டர் பின் செல்ல, புகழ் விம்ம, கொடிகளோடும் நாள்விழ மல்கு குற்றாலம் கடி கொள் கொன்றை, கூவிள மாலை, காதல் செய் அடிகள் மேய நன்நகர் போலும்; அடியீர்காள்! |
உரை |
1071. |
செல்வம் மல்கு செண்பகம் வேங்கை சென்று ஏறி, கொல்லை முல்லை மெல் அரும்பு ஈனும் குற்றாலம் வில்லின் ஒல்க மும்மதில் எய்து, வினை போக நல்கும் நம்பான் நன்நகர்போலும்; நமரங்காள்! |
உரை |
1072. |
பக்கம் வாழைப் பாய் கனியோடு பலவின் தேன், கொக்கின் கோட்டுப் பைங்கனி, தூங்கும் குற்றாலம் அக்கும் பாம்பும் ஆமையும் பூண்டு ஓர் அனல் ஏந்தும் நக்கன் மேய நன்நகர்போலும்; நமரங்காள்! |
உரை |
1073. |
மலை ஆர் சாரல் மகஉடன் வந்த மடமந்தி குலை ஆர் வாழைத் தீம்கனி மாந்தும் குற்றாலம் இலை ஆர் சூலம் ஏந்திய கையான், எயில் எய்த சிலையான், மேய நன்நகர்போலும்; சிறு தொண்டீர்! |
உரை |
1074. |
மைம்மா நீலக் கண்ணியர் சாரல் மணி வாரி, கொய்ம் மா ஏனல் உண் கிளி ஓப்பும் குற்றாலம் கைம்மா வேழத்து ஈர் உரி போர்த்த கடவுள், எம் பெம்மான், மேய நன் நகர்போலும்; பெரியீர்காள்! |
உரை |
1075. |
நீலம், நெய்தல், தண்சுனை சூழ்ந்த நீள் சோலை, கோல மஞ்ஞை பேடையொடு ஆடும் குற்றாலம் காலன் தன்னைக் காலால் காய்ந்த கடவுள் எம் சூலபாணி, நன்நகர் போலும்; தொழுவீர்காள்! |
உரை |
1076. |
போதும் பொன்னும் உந்தி அருவி புடை சூழ, கூதல் மாரி நுண்துளி தூங்கும் குற்றாலம் மூதூர் இலங்கை முட்டிய கோனை முறை செய்த நாதன் மேய நன்நகர் போலும்; நமரங்காள்! |
உரை |
1077. |
அரவின் வாயின் முள் எயிறு எய்ப்ப அரும்பு ஈன்று, குரவம்பாவை முருகு அமர் சோலைக் குற்றாலம் பிரமனோடு மால் அறியாத பெருமை எம் பரமன் மேய நன் நகர்போலும்; பணிவீர்காள்! |
உரை |
1078. |
பெருந் தண்சாரல் வாழ் சிறை வண்டு பெடை புல்கி, குருந்தம் ஏறிச் செவ்வழி பாடும் குற்றாலம் இருந்து உண் தேரும் நின்று உண் சமணும் எடுத்து ஆர்ப்ப, அருந் தண் மேய நன்நகர்போலும்; அடியீர்காள்! |
உரை |
1079. |
மாட வீதி வருபுனல் காழியார் மன்னன், கோடல் ஈன்று கொழு முனை கூம்பும் குற்றாலம் நாட வல்ல, நல்-தமிழ் ஞானசம்பந்தன், பாடல்பத்தும் பாட, நம் பாவம் பறையுமே. |
உரை |