தொடக்கம் | ||
102. சீகாழி - குறிஞ்சி
|
||
1102. |
“உரவு ஆர் கலையின் கவிதைப் புலவர்க்கு ஒருநாளும் கரவா வண்கைக் கற்றவர் சேரும் கலிக் காழி அரவு ஆர் அரையா! அவுணர் புரம் மூன்று எரி செய்த சரவா!” என்பார் தத்துவஞானத் தலையாரே. |
உரை |
1103. |
“மொய் சேர் வண்டு உண் மும்மதம் நால்வாய் முரண் வேழக் கை போல் வாழை காய்குலை ஈனும் கலிக் காழி மை சேர் கண்டத்து எண்தோள் முக்கண் மறையோனே! ஐயா!” என்பார்க்கு அல்லல்கள் ஆன அடையாவே. |
உரை |
1104. |
“இளகக் கமலத்து ஈன் கள் இயங்கும் கழி சூழ, களகப் புரிசைக் கவின் ஆர் சாரும் கலிக் காழி, அளகத் திரு நன்நுதலி பங்கா! அரனே!” என்று உளகப் பாடும் அடியார்க்கு உறு நோய் அடையாவே. |
உரை |
1105. |
“எண் ஆர் முத்தம் ஈன்று, மரகதம் போல் காய்த்து, கண் ஆர் கமுகு பவளம் பழுக்கும் கலிக் காழி, பெண் ஓர் பாகா! பித்தா! பிரானே!” என்பார்க்கு நண்ணா, வினைகள்; நாள்தொறும் இன்பம் நணுகுமே. |
உரை |
1106. |
“மழை ஆர் சாரல் செம்புனல் வந்து அங்கு அடி வருட, கழை ஆர் கரும்பு கண்வளர் சோலைக் கலிக் காழி, உழை ஆர் கரவா! உமையாள் கணவா! ஒளிர்சங்கக்- குழையா!” என்று கூற வல்லார்கள் குணவோரே. |
உரை |
1107. |
“குறி ஆர் திரைகள் வரைகள் நின்றும் கோட்டாறு கறி ஆர் கழி சம்பு இரசம் கொடுக்கும் கலிக் காழி, வெறி ஆர் கொன்றைச் சடையா! விடையா!” என்பாரை அறியா, வினைகள்; அருநோய், பாவம், அடையாவே. |
உரை |
1108. |
“உலம் கொள் சங்கத்து ஆர் கலி ஓதத்து உதையுண்டு, கலங்கள் வந்து கார் வயல் ஏறும் கலிக் காழி, இலங்கை மன்னன் தன்னை இடர் கண்டு அருள் செய்த சலம் கொள் சென்னி மன்னா!” என்ன, தவம் ஆமே. |
உரை |
1109. |
“ஆவிக் கமலத்து அன்னம் இயங்கும் கழி சூழ, காவிக் கண்ணார் மங்கலம் ஓவாக் கலிக் காழி, வில்-தோன்றும் புத்தேளொடு மாலவன் தானும் மேவிப் பரவும் அரசே!” என்ன, வினை போமே. |
உரை |
1110. |
“மலை ஆர் மாடம், நீடு உயர் இஞ்சி, மஞ்சு ஆரும் கலை ஆர் மதியம் சேர்தரும் அம் தண் கலிக் காழித் தலைவா! சமணர் சாக்கியர்க்கு என்றும் அறிவு ஒண்ணா நிலையாய்!” என்ன, தொல்வினை ஆய நில்லாவே. |
உரை |
1111. |
வடி கொள் வாவிச் செங்கழு நீரில் கொங்கு ஆடிக் கடி கொள் தென்றல் முன்றிலில் வைகும் கலிக் காழி அடிகள் தம்மை, அந்தம் இல் ஞானசம்பந்தன் படி கொள் பாடல் வல்லவர் தம்மேல் பழி போமே. |
உரை |