தொடக்கம் | ||
105. திருஆரூர் - வியாழக்குறிஞ்சி
|
||
1133. |
பாடலன் நால்மறையன்; படி பட்ட கோலத்தன்; திங்கள் சூடலன்; மூ இலையசூலம் வலன் ஏந்தி; கூடலர் மூஎயிலும் எரியுண்ண, கூர் எரி கொண்டு, எல்லி ஆடலன்; ஆதிரையன்-ஆரூர் அமர்ந்தானே. |
உரை |
1134. |
சோலையில் வண்டு இனங்கள் சுரும்போடு இசை முரல, சூழ்ந்த ஆலையின் வெம்புகை போய் முகில் தோயும் ஆரூரில், பாலொடு நெய் தயிரும் பயின்று ஆடும் பரமேட்டி பாதம், காலையும் மாலையும் போய், பணிதல் கருமமே. |
உரை |
1135. |
உள்ளம் ஓர் இச்சையினால் உகந்து ஏத்தித் தொழுமின், தொண்டீர்! மெய்யே கள்ளம் ஒழிந்திடுமின்! கரவாது இரு பொழுதும், வெள்ளம் ஓர் வார் சடை மேல் கரந்திட்ட வெள் ஏற்றான் மேய, அள்ளல் அகன் கழனி, ஆரூர் அடைவோமே. |
உரை |
1136. |
வெந்து உறு வெண் மழுவாள் படையான், மணிமிடற்றான், அரையின் ஐந்தலை ஆடு அரவம் அசைத்தான், அணி ஆரூர்ப் பைந்தளிர்க் கொன்றை அம்தார்ப் பரமன் அடி பரவ, பாவம் நைந்து அறும்; வந்து அணையும், நாள்தொறும் நல்லனவே. |
உரை |
1137. |
வீடு பிறப்பு எளிது ஆம்; அதனை வினவுதிரேல், வெய்ய காடு இடம் ஆக நின்று கனல் ஏந்திக் கை வீசி ஆடும் அவிர்சடையான் அவன் மேய ஆரூரைச் சென்று பாடுதல், கைதொழுதல், பணிதல், கருமமே. |
உரை |
1138. |
கங்கை ஓர் வார்சடைமேல் கரந்தான், கிளிமழலைக் கேடு இல் மங்கை ஓர் கூறு உடையான், மறையான், மழு ஏந்தும் அம் கையினான், அடியே பரவி, அவன் மேய ஆரூர் தம் கையினால்-தொழுவார் தடுமாற்று அறுப்பாரே. |
உரை |
1139. |
நீறு அணி மேனியனாய், நிரம்பா மதி சூடி, நீண்ட ஆறு அணி வார்சடையான், ஆரூர் இனிது அமர்ந்தான்- சேறு அணி மா மலர்மேல் பிரமன் சிரம் அரிந்த, செங்கண் ஏறு அணி வெள் கொடியான் அவன்-எம்பெருமானே. |
உரை |
1140. |
வல்லியந்தோல் உடையான், வளர் திங்கள் கண்ணியினான், வாய்த்த நல் இயல் நான்முகத்தோன் தலையில் நறவு ஏற்றான், அல்லி அம் கோதை தன்னை ஆகத்து அமர்ந்து அருளி, ஆரூர்ப் புல்லிய புண்ணியனைத் தொழுவாரும் புண்ணியரே. |
உரை |
1141. |
செந்துவர் ஆடையினார், உடை விட்டு நின்று உழல்வார், சொன்ன இந்திரஞாலம் ஒழிந்து, இன்பு உற வேண்டுதிரேல், அந்தர மூ எயிலும் அரணம் எரியூட்டி, ஆரூர்த் தம் திரமா உடையான் அவன்-எம் தலைமையனே. |
உரை |
1142. |
நல்ல புனல் புகலித் தமிழ் ஞானசம்பந்தன், நல்ல அல்லிமலர்க் கழனி ஆரூர் அமர்ந்தானை, வல்லது ஓர் இச்சையினால், வழிபாடு இவைபத்தும் வாய்க்கச் சொல்லுதல், கேட்டல், வல்லார் துன்பம் துடைப்பாரே. |
உரை |