தொடக்கம் | ||
106. திருஊறல் - வியாழக்குறிஞ்சி
|
||
1143. |
மாறு இல் அவுணர் அரணம் அவை மாய, ஓர் வெங்கணையால், அன்று, நீறு எழ எய்த எங்கள் நிமலன் இடம் வினவில் தேறல் இரும் பொழிலும், திகழ் செங்கயல் பாய் வயலும், சூழ்ந்த ஊறல்; அமர்ந்த பிரான் ஒலி ஆர் கழல் உள்குதுமே. |
உரை |
1144. |
மத்தமதக்கரியை, மலையான்மகள் அஞ்ச, அன்று, கையால் மெத்த உரித்த எங்கள் விமலன் விரும்பும் இடம் தொத்து அலரும் பொழில் சூழ் வயல் சேர்ந்து, ஒளிர் நீலம் நாளும் நயனம் ஒத்து அலரும் கழனி திரு ஊறலை உள்குதுமே. |
உரை |
1145. |
ஏன மருப்பினொடும் எழில் ஆமையும் பூண்ட அழகார், நன்றும் கான் அமர் மான்மறிக் கைக் கடவுள், கருதும் இடம் வான மதி தடவும் வளர் சோலைகள் சூழ்ந்து, அழகு ஆர், நம்மை ஊனம் அறுத்த பிரான்-திரு ஊறலை உள்குதுமே. |
உரை |
1146. |
நெய் அணி மூஇலைவேல், நிறை வெண்மழுவும், அனலும், அன்று, கை அணி கொள்கையினான் கடவுள் இடம் வினவில் மை அணி கண் மடவார்பலர் வந்து இறைஞ்ச, மன்னி நம்மை உய்யும் வகை புரிந்தான்-திரு ஊறலை உள்குதுமே. |
உரை |
1147. |
எண்திசையோர் மகிழ, எழில் மாலையும் போனகமும், பண்டு, கண்டி தொழ அளித்தான் அவன் தாழும் இடம் வினவில் கொண்டல்கள் தங்கு பொழில் குளிர்பொய்கைகள் சூழ்ந்து, நஞ்சை உண்ட பிரான் அமரும் திரு ஊறலை உள்குதுமே. |
உரை |
1148. |
கறுத்த மனத்தினொடும் கடுங்காலன் வந்து எய்துதலும், கலங்கி, மறுக்கு உறும் மாணிக்கு அருள மகிழ்ந்தான் இடம் வினவில் செறுத்து எழு வாள் அரக்கன் சிரம் தோளும் மெய்யும் நெரிய அன்று ஒறுத்து, அருள் செய்த பிரான்-திரு ஊறலை உள்குதுமே. |
உரை |
1149. |
நீரின் மிசைத் துயின்றோன் நிறை நான்முகனும் அறியாது, அன்று, தேரும் வகை நிமிர்ந்தான் அவன் சேரும் இடம் வினவில் பாரின் மிசை அடியார் பலர் வந்து இறைஞ்ச, மகிழ்ந்து, ஆகம் ஊரும் அரவு அசைத்தான்-திரு ஊறலை உள்குதுமே. |
உரை |
1150. |
பொன் இயல் சீவரத்தார், புளித் தட்டையர், மோட்டு அமணர்குண்டர், என்னும் இவர்க்கு அருளா ஈசன் இடம் வினவில் தென்னென வண்டு இனங்கள் செறி ஆர் பொழில் சூழ்ந்து, அழகு ஆர், தன்னை உன்ன வினை கெடுப்பான்-திரு ஊறலை உள்குதுமே. |
உரை |
1151. |
கோடல் இரும் புறவில் கொடி மாடக் கொச்சையர்மன், மெச்ச ஓடுபுனல் சடைமேல் கரந்தான் திரு ஊறல், நாடல் அரும்புகழான் மிகு ஞானசம்பந்தன், சொன்ன நல்ல பாடல்கள் பத்தும் வல்லார் பரலோகத்து இருப்பாரே. |
உரை |