தொடக்கம் | ||
108. திருப்பாதாளீச்சுரம் - வியாழக்குறிஞ்சி
|
||
1163. |
மின் இயல் செஞ்சடைமேல் விளங்கும் மதி மத்தமொடு நல்ல பொன் இயல் கொன்றையினான்; புனல் சூடி; பொற்பு அமரும் அன்னம் அன நடையாள் ஒரு பாகத்து அமர்ந்து அருளி; நாளும் பன்னிய பாடலினான்; உறை கோயில்-பாதாளே. |
உரை |
1164. |
நீடு அலர் கொன்றையொடு நிரம்பா மதி சூடி; வெள்ளைத்- தோடு அமர் காதில் நல்ல குழையான்; சுடு நீற்றான்; ஆடு அரவம் பெருக அனல் ஏந்திக் கை வீசி, வேதம் பாடலினால் இனியான்; உறை கோயில் பாதாளே. |
உரை |
1165. |
நாகமும் வான்மதியும் நலம் மல்கு செஞ்சடையான், சாமம் போக நல் வில்வரையால் புரம் மூன்று எரித்து உகந்தான், தோகை நல் மாமயில் போல் வளர் சாயல்-மொழியைக் கூடப் பாகமும் வைத்து உகந்தான், உறை கோயில்-பாதாளே. |
உரை |
1166. |
அங்கமும் நால்மறையும் அருள்செய்து, அழகு ஆர்ந்த அம் சொல் மங்கை ஓர் கூறு உடையான், மறையோன், உறை கோயில் செங்கயல் நின்று உகளும் செறுவில்-திகழ்கின்ற சோதிப் பங்கயம் நின்று அலரும் வயல் சூழ்ந்த பாதாளே. |
உரை |
1167. |
பேய் பலவும் நிலவப் பெருங்காடு அரங்கு ஆக உன்னி நின்று, தீயொடு மான்மறியும் மழுவும் திகழ்வித்து, தேய்பிறையும் அரவும் பொலி கொன்றைச் சடைதன் மேல் சேர, பாய் புனலும் உடையான் உறை கோயில் பாதாளே. |
உரை |
1168. |
கண் அமர் நெற்றியினான், கமழ் கொன்றைச் சடைதன்மேல் நன்றும் விண் இயல் மா மதியும் உடன் வைத்தவன், விரும்பும் பெண் அமர் மேனியினான், பெருங்காடு அரங்கு ஆக ஆடும் பண் இயல் பாடலினான், உறை கோயில் பாதாளே. |
உரை |
1169. |
விண்டு அலர் மத்தமொடு மிளிரும் இள நாகம், வன்னி, திகழ் வண்டு அலர் கொன்றை, நகு மதி, புல்கு வார்சடையான்; விண்டவர் தம் புரம் மூன்று எரி செய்து, உரை வேதம் நான்கும் அவை பண்டு இசைபாடலினான்; உறை கோயில் பாதாளே. |
உரை |
1170. |
மல்கிய நுண் இடையாள் உமை நங்கை மறுக, அன்று, கையால்- தொல்லைமலை எடுத்த அரக்கன் தலைதோள் நெரித்தான்; கொல்லை விடை உகந்தான்; குளிர்திங்கள் சடைக்கு அணிந்தோன்; பல் இசை பாடலினான்; உறை கோயில் பாதாளே. |
உரை |
1171. |
தாமரைமேல் அயனும் அரியும் தமது ஆள்வினையால்-தேடி, காமனை வீடுவித்தான் கழல் காண்பு இலராய் அகன்றார்; பூ மருவும் குழலாள் உமைநங்கை பொருந்தியிட்ட நல்ல பா மருவும் குணத்தான் உறை கோயில் பாதாளே. |
உரை |
1172. |
காலையில் உண்பவரும் சமண்கையரும் கட்டுரை விட்டு, அன்று ஆலவிடம் நுகர்ந்தான் அவன்தன் அடியே பரவி, மாலையில் வண்டு இனங்கள் மது உண்டு இசை முரல, வாய்த்த பாலையாழ்ப் பாட்டு உகந்தான் உறை கோயில் பாதாளே. |
உரை |
1173. |
பல்மலர் வைகு பொழில் புடை சூழ்ந்த பாதாளைச் சேர, பொன் இயல் மாடம் மல்கு புகலி நகர் மன்னன்- தன் ஒளி மிக்கு உயர்ந்த தமிழ் ஞானசம்பந்தன்-சொன்ன இன் இசைபத்தும் வல்லார் எழில் வானத்து இருப்பாரே. |
உரை |