தொடக்கம் | ||
109. திருச்சிரபுரம் - வியாழக்குறிஞ்சி
|
||
1174. |
வார் உறு வனமுலை மங்கை பங்கன், நீர் உறு சடை முடி நிமலன், இடம் கார் உறு கடி பொழில் சூழ்ந்து அழகு ஆர் சீர் உறு வளவயல் சிரபுரமே. |
உரை |
1175. |
அங்கமொடு அருமறை அருள்புரிந்தான், திங்களொடு அரவு அணி திகழ் முடியன், மங்கையொடு இனிது உறை வள நகரம் செங்கயல் மிளிர் வயல், சிரபுரமே. |
உரை |
1176. |
பரிந்தவன், பல் முடி அமரர்க்கு ஆகித் திரிந்தவர் புரம் அவை தீயின் வேவ வரிந்த வெஞ்சிலை பிடித்து, அடுசரத்தைத் தெரிந்தவன், வள நகர் சிரபுரமே. |
உரை |
1177. |
நீறு அணி மேனியன், நீள் மதியோடு ஆறு அணி சடையினன், அணியிழை ஓர்- கூறு அணிந்து இனிது உறை குளிர் நகரம் சேறு அணி வளவயல், சிரபுரமே. |
உரை |
1178. |
அருந்திறல் அவுணர்கள் அரண் அழியச் சரம் துரந்து எரி செய்த சங்கரன் ஊர் குருந்தொடு கொடிவிடு மாதவிகள் திருந்திய புறவு அணி சிரபுரமே. |
உரை |
1179. |
கலை அவன், மறை அவன், காற்றொடு தீ மலை அவன், விண்ணொடு மண்ணும் அவன், கொலைய வன் கொடி மதில் கூட்டு அழித்த சிலையவன், வள நகர் சிரபுரமே. |
உரை |
1180. |
வான் அமர் மதியொடு மத்தம் சூடித் தானவர் புரம் எய்த சைவன் இடம் கான் அமர் மடமயில் பெடை பயிலும் தேன் அமர் பொழில் அணி சிரபுரமே. |
உரை |
1181. |
மறுத்தவர் திரிபுரம் மாய்ந்து அழியக் கறுத்தவன், கார் அரக்கன் முடிதோள் இறுத்தவன், இருஞ் சினக் காலனை முன் செறுத்தவன், வள நகர் சிரபுரமே. |
உரை |
1182. |
வண்ண நல்மலர் உறை மறையவனும் கண்ணனும் கழல் தொழ, கனல் உரு ஆய் விண் உற ஓங்கிய விமலன் இடம் திண்ண நல்மதில் அணி சிரபுரமே. |
உரை |
1183. |
வெற்று அரை உழல்பவர், விரி துகிலார், கற்றிலர் அற உரை புறன் உரைக்க, பற்றலர் திரி புரம் மூன்றும் வேவச் செற்றவன் வள நகர் சிரபுரமே. |
உரை |
1184. |
அருமறை ஞானசம்பந்தன், அம் தண் சிரபுரநகர் உறை சிவன் அடியைப் பரவிய செந்தமிழ் பத்தும் வல்லார் திருவொடு புகழ் மல்கு தேசினரே. |
உரை |