தொடக்கம் | ||
110. திருஇடைமருதூர் - வியாழக்குறிஞ்சி
|
||
1185. |
மருந்து அவன், வானவர் தானவர்க்கும் பெருந்தகை, பிறவினொடு இறவும் ஆனான், அருந்தவ முனிவரொடு ஆல் நிழல் கீழ் இருந்தவன், வள நகர் இடைமருதே. |
உரை |
1186. |
தோற்று அவன் கேடு அவன், துணைமுலையாள் கூற்றவன், கொல் புலித் தோல் அசைத்த நீற்றவன், நிறை புனல் நீள் சடைமேல் ஏற்றவன், வள நகர் இடைமருதே. |
உரை |
1187. |
படை உடை மழுவினன், பால்வெண் நீற்றன், நடை நவில் ஏற்றினன், ஞாலம் எல்லாம் உடை தலை இடு பலி கொண்டு உழல்வான்- இடைமருது இனிது உறை எம் இறையே. |
உரை |
1188. |
பணைமுலை உமை ஒருபங்கன், ஒன்னார் துணை மதில் மூன்றையும் சுடரில் மூழ்கக் கணை துரந்து, அடு திறல் காலன் செற்ற இணை இலி, வள நகர் இடைமருதே. |
உரை |
1189. |
பொழில் அவன், புயல் அவன், புயல் இயக்கும் தொழில் அவன், துயர் அவன், துயர் அகற்றும் கழலவன், கரிஉரி போர்த்து உகந்த எழிலவன், வள நகர் இடைமருதே |
உரை |
1190. |
நிறை அவன், புனலொடு மதியும் வைத்த பொறையவன், புகழ் அவன், புகழ நின்ற மறை அவன், மறிகடல் நஞ்சை உண்ட இறையவன், வள நகர் இடைமருதே. |
உரை |
1191. |
நனி வளர் மதியொடு நாகம் வைத்த பனி மலர்க் கொன்றை அம் படர் சடையன், முனிவரொடு அமரர்கள் முறை வணங்க, இனிது உறை வள நகர் இடைமருதே. |
உரை |
1192. |
தருக்கின அரக்கன தாளும் தோளும் நெரித்தவன், நெடுங்கை மா மதகரி அன்று உரித்தவன், ஒன்னலர் புரங்கள் மூன்றும் எரித்தவன், வள நகர் இடைமருதே. |
உரை |
1193. |
பெரியவன், பெண்ணினொடு ஆணும் ஆனான், வரி அரவு அணை மறிகடல்-துயின்ற கரியவன் அலரவன் காண்பு அரிய எரியவன், வள நகர் இடைமருதே. |
உரை |
1194. |
சிந்தை இல் சமணொடு தேரர் சொன்ன புந்தி இல் உரை அவை பொருள் கொளாதே, அந்தணர் ஓத்தினொடு அரவம் ஓவா, எந்தைதன் வள நகர் இடைமருதே. |
உரை |
1195. |
இலை மலி பொழில் இடைமருது இறையை நலம் மிகு ஞானசம்பந்தன் சொன்ன பலம் மிகு தமிழ் இவைபத்தும் வல்லார் உலகு உறு புகழினொடு ஓங்குவரே. |
உரை |