தொடக்கம் | ||
112. திருச்சிவபுரம் - வியாழக்குறிஞ்சி
|
||
1207. |
இன்குரல் இசை கெழும் யாழ் முரலத் தன் கரம் மருவிய சதுரன் நகர் பொன் கரை பொரு பழங்காவிரியின் தென் கரை மருவிய சிவபுரமே. |
உரை |
1208. |
அன்று அடல் காலனைப் பாலனுக்கு ஆய்ப் பொன்றிட உதை செய்த புனிதன் நகர் வென்றி கொள் எயிற்று வெண்பன்றி முன்நாள் சென்று அடி வீழ்தரு சிவபுரமே. |
உரை |
1209. |
மலைமகள் மறுகிட, மதகரியைக் கொலை மல்க உரிசெய்த குழகன் நகர் அலை மல்கும் அரிசிலின் அதன் அயலே சிலை மல்கு மதில் அணி சிவபுரமே. |
உரை |
1210. |
மண், புனல், அனலொடு, மாருதமும், விண், புனை மருவிய விகிர்தன் நகர் பண் புனை குரல்வழி வண்டு கெண்டிச் செண்பகம் அலர் பொழில் சிவபுரமே. |
உரை |
1211. |
வீறு நன்கு உடையவள் மேனி பாகம் கூறு நன்கு உடையவன் குளிர் நகர்தான்- நாறு நன் குர விரி வண்டு கெண்டித் தேறல் உண்டு எழுதரு சிவபுரமே. |
உரை |
1212. |
மாறு எதிர்வரு திரிபுரம் எரித்து, நீறு அது ஆக்கிய நிமலன் நகர் நாறு உடை நடுபவர் உழவரொடும் சேறு உடை வயல் அணி சிவபுரமே. |
உரை |
1213. |
ஆவில் ஐந்து அமர்ந்தவன் அரிவையொடு மேவி நன்கு இருந்தது ஒர் வியல் நகர்தான்- வில் வண்டு அமர்தரு பொய்கை அன்னச்- சேவல் தன் பெடை புல்கு சிவபுரமே. |
உரை |
1214. |
எழில் மலை எடுத்த வல் இராவணன் தன் முழுவலி அடக்கிய முதல்வன் நகர் விழவினில் எடுத்த வெண்கொடி மிடைந்து, செழு முகில் அடுக்கும் வண் சிவபுரமே. |
உரை |
1215. |
சங்கு அளவிய கையன், சதுர்முகனும், அங்கு அளவு அறிவு அரியவன் நகர்தான்- கங்குலும் பறவைகள் கமுகுதொறும் செங்கனி நுகர்தரு சிவபுரமே. |
உரை |
1216. |
மண்டையின், குண்டிகை, மாசு தரும், மிண்டரை விலக்கிய விமலன் நகர்- பண்டு அமர்தரு பழங்காவிரியின் தெண்திரை பொருது எழு சிவபுரமே. |
உரை |
1217. |
சிவன் உறைதரு, சிவபுரநகரைக் கவுணியர் குலபதி காழியர்கோன்- தவம் மல்கு தமிழ் இவை சொல்ல வல்லார் நவமொடு சிவகதி நண்ணுவரே. |
உரை |