தொடக்கம் | ||
114. திருமாற்பேறு - வியாழக்குறிஞ்சி
|
||
1228. |
குருந்து அவன், குருகு அவன், கூர்மை அவன், பெருந்தகை, பெண் அவன், ஆணும் அவன், கருந்தட மலர்க்கண்ணி காதல் செய்யும் மருந்து அவன், வள நகர் மாற்பேறே. |
உரை |
1229. |
பாறு அணி வெண்தலை கையில் ஏந்தி, வேறு அணி பலி கொளும் வேட்கையனாய், நீறு அணிந்து, உமை ஒருபாகம் வைத்த மாறு இலி வள நகர் மாற்பேறே. |
உரை |
1230. |
கரு உடையார் உலகங்கள் வேவ, செரு விடை ஏறி முன் சென்று நின்று, உரு உடையாள் உமையாளும் தானும் மருவிய வள நகர் மாற்பேறே. |
உரை |
1231. |
தலையவன், தலை அணிமாலை பூண்டு கொலை நவில் கூற்றினைக் கொன்று உகந்தான், கலை நவின்றான், கயிலாயம் என்னும் மலையவன், வள நகர் மாற்பேறே. |
உரை |
1232. |
துறை அவன், தொழிலவன், தொல் உயிர்க்கும் பிறை அணி சடை முடிப் பெண் ஓர்பாகன், கறை அணி மிடற்று அண்ணல், காலன் செற்ற மறையவன், வள நகர் மாற்பேறே. |
உரை |
1233. |
பெண்ணின் நல்லாளை ஓர்பாகம் வைத்துக் கண்ணினால் காமனைக் காய்ந்தவன்தன், விண்ணவர் தானவர் முனிவரொடு மண்ணவர் வணங்கும், நல் மாற்பேறே. |
உரை |
1234. |
தீது இலா மலை எடுத்த அரக்கன் நீதியால் வேத கீதங்கள் பாட, ஆதியான் ஆகிய அண்ணல், எங்கள் மாதி தன் வள நகர் மாற்பேறே. |
உரை |
1235. |
செய்ய தண் தாமரைக் கண்ணனொடும் கொய் அணி நறுமலர் மேல் அயனும் ஐயன் நன் சேவடி அதனை உள்க, மையல் செய் வள நகர் மாற்பேறே. |
உரை |
1236. |
குளித்து உணா அமணர், குண்டு ஆக்கர், என்றும் களித்து நன் கழல் அடி காணல் உறார்; முளைத்த வெண்மதியினொடு அரவம் சென்னி வளைத்தவன் வள நகர் மாற்பேறே. |
உரை |
1237. |
அந்தம் இல் ஞானசம்பந்தன் நல்ல செந்து இசை பாடல் செய் மாற்பேற்றைச் சந்தம் இன் தமிழ்கள் கொண்டு ஏத்த வல்லார் எந்தை தன் கழல் அடி எய்துவரே. |
உரை |