தொடக்கம் | ||
115. திருஇராமன்நந்தீச்சுரம் - வியாழக்குறிஞ்சி
|
||
1238. |
சங்கு ஒளிர் முன் கையர் தம் இடையே அங்கு இடு பலி கொளுமவன், கோபப் பொங்கு அரவு ஆடலோன், புவனி ஓங்க எங்கும் மன், இராமன் நந்தீச்சுரமே. |
உரை |
1239. |
சந்த நல்மலர் அணி தாழ்சடையன், தந்த மதத்தவன் தாதையோ தான், அந்தம் இல் பாடலோன், அழகன், நல்ல எம் தவன், இராமன் நந்தீச்சுரமே. |
உரை |
1240. |
தழை மயில் ஏறவன் தாதையோ தான், மழை பொதி சடையவன், மன்னு காதில் குழை அது விலங்கிய கோல மார்பின் இழையவன், இராமன் நந்தீச்சுரமே. |
உரை |
1241. |
சத்தியுள் ஆதி ஓர் தையல் பங்கன், முத்தி அது ஆகிய மூர்த்தியோ தான், அத்திய கையினில் அழகு சூலம் வைத்தவன், இராமன் நந்தீச்சுரமே. |
உரை |
1242. |
தாழ்ந்த குழல் சடைமுடி அதன்மேல்- தோய்ந்த இளம்பிறை துளங்கு சென்னிப் பாய்ந்த கங்கையொடு பட அரவம் ஏய்ந்தவந்-இராமன் நந்தீச்சுரமே. |
உரை |
1243. |
சரிகுழல் இலங்கிய தையல் காணும் பெரியவன், காளிதன் பெரிய கூத்தை அரியவன், ஆடலோன், அங்கை ஏந்தும் எரியவன், இராமன் நந்தீச்சுரமே. |
உரை |
1244. |
மாறு இலா மாது ஒருபங்கன், மேனி நீறு அது ஆடலோன், நீள்சடைமேல் ஆறு அது சூடுவான், அழகன், விடை ஏறவன், இராமன் நந்தீச்சுரமே. |
உரை |
1245. |
தடவரை அரக்கனைத் தலை நெரித்தோன், பட அரவு ஆட்டிய படர் சடையன், நடம் அது ஆடலான், நால்மறைக்கும் இடமவன், இராமன் நந்தீச்சுரமே. |
உரை |
1246. |
தனம் அணி தையல் தன் பாகன் தன்னை, அனம் அணி அயன் அணிமுடியும் காணான்; பன மணி அரவு அரி பாதம் காணான்; இன மணி இராமன் நந்தீச்சுரமே. |
உரை |
1247. |
தறி போல் ஆம் சமணர் சாக்கியர் சொல் கொளேல்! அறிவோர் அரன் நாமம் அறிந்து உரைமின்! மறி கையோன், தன் முடி மணி ஆர் கங்கை எறியவன், இராமன் நந்தீச்சுரமே. |
உரை |
1248. | தேன் மலர்க் கொன்றை யோன்........ | உரை |