தொடக்கம் | ||
117. திருப்பிரமபுரம் - மொழிமாற்று - வியாழக்குறிஞ்சி
|
||
1259. |
காடு அது, அணிகலம் கார் அரவம், பதி; கால் அதனில்,- தோடு அது அணிகுவர் சுந்தரக் காதினில்,-தூச் சிலம்பர்; வேடு அது அணிவர், விசயற்கு, உருவம், வில்லும் கொடுப்பர்; பீடு அது மணி மாடப் பிரமபுரத்து அரரே. |
உரை |
1260. |
கற்றைச் சடையது, கங்கணம் முன்கையில்-திங்கள் கங்கை; பற்றித்து, முப்புரம், பார் படைத்தோன் தலை, சுட்டது பண்டு; எற்றித்து, பாம்பை அணிந்தது, கூற்றை; எழில் விளங்கும் வெற்றிச் சிலைமதில் வேணுபுரத்து எங்கள் வேதியரே. |
உரை |
1261. |
கூவிளம், கையது பேரி, சடைமுடிக் கூட்டத்தது; தூ விளங்கும் பொடி, பூண்டது, பூசிற்று, துத்தி நாகம்; ஏ விளங்கும் நுதல், ஆனையும், பாகம், உரித்தனர்; இன் இளஞ் சோலைப் புகலியுள் மேவிய புண்ணியரே. |
உரை |
1262. |
உரித்தது, பாம்பை உடல்மிசை இட்டது, ஓர் ஒண் களிற்றை; எரித்தது, ஒர் ஆமையை இன்பு உறப் பூண்டது, முப்புரத்தை; செருத்தது, சூலத்தை ஏந்திற்று, தக்கனை வேள்வி; பல்-நூல் விரித்தவர் வாழ்தரு வேங்குருவில் வீற்றிருந்தவரே. |
உரை |
1263. |
கொட்டுவர், அக்கு அரை ஆர்ப்பது, தக்கை; குறுந்தாளன இட்டுவர் தம், கலப்பு இலர், இன்புகழ், என்பு; உலவின் மட்டு வரும் தழல், சூடுவர் மத்தமும், ஏந்துவர்; வான் தொட்டு வரும் கொடித் தோணிபுரத்து உறை சுந்தரரே. |
உரை |
1264. |
சாத்துவர், பாசம் தடக்கையில் ஏந்துவர், கோவணம்; தம் கூத்து, அவர், கச்சுக் குலவி நின்று, ஆடுவர்; கொக்கு இறகும், பேர்த்தவர் பல்படை பேய் அவை, சூடுவர்; பேர் எழிலார்; பூத்தவர் கைதொழு பூந்தராய் மேவிய புண்ணியரே. |
உரை |
1265. |
காலது, கங்கை கற்றைச் சடையுள்ளால், கழல் சிலம்பு; மாலது, ஏந்தல் மழு அது, பாகம்; வளர் கொழுங் கோட்டு ஆல் அது, ஊர்வர் அடல் ஏற்று, இருப்பர்; அணி மணி நீர்ச் சேல் அது கண்ணி ஒர்பங்கர் சிரபுரம் மேயவரே. |
உரை |
1266. |
நெருப்பு உரு, வெள்விடை, மேனியர், ஏறுவர்; நெற்றியின் கண், மருப்பு உருவன், கண்ணர், தாதையைக் காட்டுவர்; மா முருகன் விருப்பு உறு, பாம்புக்கு மெய், தந்தையார்; விறல் மா தவர் வாழ் பொருப்பு உறு மாளிகைத் தென் புறவத்து அணி புண்ணியரே. |
உரை |
1267. |
இலங்கைத் தலைவனை, ஏந்திற்று, இறுத்தது, இரலை; இல்-நாள், கலங்கிய கூற்று, உயிர் பெற்றது மாணி, குமை பெற்றது; கலம் கிளர் மொந்தையின், ஆடுவர், கொட்டுவர், காட்டு அகத்து; சலம் கிளர் வாழ் வயல் சண்பையுள் மேவிய தத்துவரே. |
உரை |
1268. |
அடி இணை கண்டிலன், தாமரையோன், மால், முடி கண்டிலன்; கொடி அணியும், புலி, ஏறு, உகந்து ஏறுவர், தோல் உடுப்பர்; பிடி அணியும் நடையாள், வெற்பு இருப்பது, ஓர்கூறு உடையர்; கடி அணியும் பொழில் காழியுள் மேய கறைக்கண்டரே. |
உரை |
1269. |
கையது, வெண்குழை காதது, சூலம்; அமணர் புத்தர், எய்துவர், தம்மை, அடியவர், எய்தார்; ஓர் ஏனக்கொம்பு, மெய் திகழ் கோவணம், பூண்பது, உடுப்பது; மேதகைய கொய்து அலர் பூம்பொழில் கொச்சையுள் மேவிய கொற்றவரே. |
உரை |
1270. |
கல் உயர் இஞ்சிக் கழுமலம் மேய கடவுள் தன்னை நல் உரை ஞானசம்பந்தன் ஞானத்தமிழ் நன்கு உணரச் சொல்லிடல் கேட்டல் வல்லோர், தொல்லை வானவர் தங்களொடும் செல்குவர்; சீர் அருளால் பெறல் ஆம் சிவலோகம் அதே. |
உரை |