தொடக்கம் | ||
120. திருஐயாறு - திருவிராகம் - வியாழக்குறிஞ்சி
|
||
1293. |
பணிந்தவர் அருவினை பற்று அறுத்து அருள்செயத் துணிந்தவன், தோலொடு நூல் துதை மார்பினில் பிணிந்தவன், அரவொடு பேர் எழில் ஆமை கொண்டு அணிந்தவன், வள நகர் அம் தண் ஐயாறே. |
உரை |
1294. |
கீர்த்தி மிக்கவன் நகர் கிளர் ஒளி உடன் அடப் பார்த்தவன்; பனிமதி படர் சடை வைத்து, போர்த்தவன் கரி உரி; புலி அதள், அரவு, அரை ஆர்த்தவன்; வள நகர் அம் தண் ஐயாறே. |
உரை |
1295. |
வரிந்த வெஞ்சிலை பிடித்து, அவுணர்தம் வள நகர் எரிந்து அற எய்தவன்; எழில் திகழ் மலர்மேல் இருந்தவன் சிரம் அது, இமையவர் குறை கொள, அரிந்தவன்; வள நகர் அம் தண் ஐயாறே. |
உரை |
1296. |
வாய்ந்த வல் அவுணர் தம் வள நகர் எரி இடை மாய்ந்து அற எய்தவன், வளர்பிறை விரிபுனல் தோய்ந்து எழு சடையினன், தொல்மறை ஆறு அங்கம் ஆய்ந்தவன், வள நகர் அம் தண் ஐயாறே. |
உரை |
1297. |
வான் அமர் மதி புல்கு சடை இடை அரவொடு தேன் அமர் கொன்றையன், திகழ்தரு மார்பினன், மான் அன மென் விழி மங்கை ஒர் பாகமும் ஆனவன், வள நகர் அம் தண் ஐயாறே. |
உரை |
1298. |
முன்பனை, முனிவரொடு அமரர்கள் தொழுது எழும் இன்பனை, இணை இல இறைவனை, எழில் திகழ் என் பொனை, ஏதம் இல் வேதியர் தாம் தொழும் அன்பன வள நகர் அம் தண் ஐயாறே. |
உரை |
1299. |
வன்திறல் அவுணர்தம் வள நகர் எரி இடை வெந்து அற எய்தவன், விளங்கிய மார்பினில் பந்து அமர் மெல் விரல் பாகம் அது ஆகி, தன் அந்தம் இல் வள நகர் அம் தண் ஐயாறே. |
உரை |
1300. |
விடைத்த வல் அரக்கன் நல் வெற்பினை எடுத்தலும், அடித்தலத்தால் இறை ஊன்றி, மற்று அவனது முடித்தலை தோள் அவை நெரிதர, முறைமுறை அடர்த்தவன் வள நகர் அம் தண் ஐயாறே. |
உரை |
1301. |
விண்ணவர் தம்மொடு, வெங்கதிரோன், அனல், எண் இலி தேவர்கள், இந்திரன், வழிபட, கண்ணனும் பிரமனும் காண்பு அரிது ஆகிய அண்ணல் தன் வள நகர் அம் தண் ஐயாறே. |
உரை |
1302. |
மருள் உடை மனத்து வன் சமணர்கள், மாசு அறா இருள் உடை இணைத்துவர்ப் போர்வையினார்களும், தெருள் உடை மனத்தவர்; தேறுமின், திண்ணமா அருள் உடை அடிகள் தம் அம் தண் ஐயாறே! |
உரை |
1303. |
நலம் மலி ஞானசம்பந்தனது இன்தமிழ் அலை மலி புனல் மல்கும் அம் தண் ஐயாற்றினைக் கலை மலி தமிழ் இவை கற்று வல்லார் மிக நலம் மலி புகழ் மிகு நன்மையர்தாமே. |
உரை |