121. திருஇடைமருதூர் - திருவிராகம் - வியாழக்குறிஞ்சி
 
1304. நடை மரு திரிபுரம் எரியுண நகை செய்த
படை மரு தழல் எழ மழு வல பகவன்,
புடை மருது இள முகில் வளம் அமர் பொதுளிய,
இடை மருது அடைய, நம் இடர் கெடல் எளிதே.
உரை
   
1305. மழை நுழை மதியமொடு, அழிதலை, மடமஞ்ஞை
கழை நுழை புனல், பெய்த கமழ் சடைமுடியன்;
குழை நுழை திகழ் செவி, அழகொடு மிளிர்வது ஒர்
இழை நுழை புரி அணல்; இடம் இடைமருதே.
உரை
   
1306. அருமையன், எளிமையன், அழல் விட மிடறினன்,
கருமையின் ஒளி பெறு கமழ் சடைமுடியன்,
பெருமையன், சிறுமையன், பிணைபெணொடு ஒருமையின்
இருமையும் உடை அணல், இடம் இடைமருதே.
உரை
   
1307. பொரி படு முதுகு உற முளி களி புடை புல்கு
நரி வளர் சுடலையுள் நடம் என நவில்வோன்,
வரி வளர் குளிர்மதி ஒளி பெற மிளிர்வது ஒர்
எரி வளர்சடை அணல், இடம் இடைமருதே.
உரை
   
1308. வரு நல மயில் அன மடநடை மலைமகள்
பெரு நல முலை இணை பிணைசெய்த பெருமான்,
செரு நல மதில் எய்த சிவன், உறை செழு நகர்
இரு நல புகழ் மல்கும் இடம் இடைமருதே.
உரை
   
1309. கலை உடை விரி துகில், கமழ்குழல், அகில்புகை,
மலை உடை மடமகள் தனை இடம் உடையோன்;
விலை உடை அணிகலன் இலன் என மழுவினொடு
இலை உடை படையவன்; இடம் இடைமருதே.
உரை
   
1310. வளம் என வளர்வன வரி முரல் பறவைகள்
இள மணல் அணை கரை இசைசெயும் இடைமருது
உளம் என நினைபவர் ஒலிகழல் இணை அடி,
குளம் அணல் உற மூழ்கி, வழிபடல் குணமே.
உரை
   
1311. “மறை அவன், உலகு அவன், மதியவன், மதி புல்கு
துறையவன்” என வல அடியவர் துயர் இலர்;
கறையவன் மிடறு அது, கனல் செய்த கமழ் சடை
இறையவன், உறைதரும் இடம் இடைமருதே.
உரை
   
1312. மருது இடை நடவிய மணிவணர், பிரமரும்
இருது உடை அகலமொடு இகலினர், இனது எனக்
கருதிடல் அரியது ஒர் உருவொடு பெரியது ஒர்
எருது உடை அடிகள் தம் இடம் இடைமருதே.
உரை
   
1313. துவர் உறு விரிதுகில் உடையரும் அமணரும்
அவர் உறு சிறுசொலை நயவன்மின்! இடு மணல்
கவர் உறு புனல் இடைமருது கைதொழுது எழு-
மவர் உறு வினை கெடல் அணுகுதல் குணமே.
உரை
   
1314. தட மலி புகலியர் தமிழ் கெழு விரகினன்,
இடம் மலி பொழில் இடைமருதினை இசை செய்த,
படம் மலி, தமிழ் இவை பரவ வல்லவர் வினை
கெட, மலி புகழொடு கிளர் ஒளியினரே.
உரை