தொடக்கம் | ||
122. திருஇடைமருதூர் - திருவிராகம் - வியாழக்குறிஞ்சி
|
||
1315. |
விரிதரு புலிஉரி விரவிய அரையினர், திரிதரும் எயில் அவை புனை கணையினில் எய்த எரிதரு சடையினர், இடைமருது அடைவு உனல் புரிதரும் மன்னவர் புகழ் மிக உளதே. |
உரை |
1316. |
“மறிதிரை படு கடல் விடம் அடை மிடறினர் எறிதிரை கரை பொரும் இடைமருது” எனுமவர் செறி திரை நரையொடு செலவு இலர், உலகினில்; பிறிது இரை பெறும் உடல் பெருகுவது அரிதே. |
உரை |
1317. |
சலசல சொரி புனல் சடையினர், மலைமகள் நிலவிய உடலினர், நிறை மறைமொழியினர், இலர் என இடு பலியவர், இடைமருதினை வலம் இட, உடல் நலிவு இலது, உள வினையே. |
உரை |
1318. |
விடையினர், வெளியது ஒர் தலை கலன் என நனி கடை கடை தொறு, “பலி இடுக!” என முடுகுவர், இடைவிடல் அரியவர் இடை மருது எனும் நகர் உடையவர்; அடி இணை தொழுவது எம் உயர்வே. |
உரை |
1319. |
“உரை அரும் உருவினர், உணர்வு அரு வகையினர், அரை பொரு புலி அதள் உடையினர், அதன்மிசை இரை மரும் அரவினர், இடைமருது” என உளம் உரைகள் அது உடையவர் புகழ் மிக உளதே. |
உரை |
1320. |
ஒழுகிய புனல் மதி அரவமொடு உறைதரும் அழகிய முடி உடை அடிகளது, அறைகழல் எழிலினர் உறை, இடைமருதினை மலர்கொடு தொழுதல் செய்து எழுமவர் துயர் உறல் இலரே. |
உரை |
1321. |
கலை மலி விரலினர், கடியது ஒர் மழுவொடும் நிலையினர், சலமகள் உலவிய சடையினர், மலைமகள் முலை இணை மருவிய வடிவினர், இலை மலி படையவர், இடம் இடைமருதே. |
உரை |
1322. |
செருவு அடை இல வல செயல் செய் அத் திறலொடும் அரு வரையினில் ஒருபது முடி நெரிதர, இருவகை விரல் நிறியவர் இடைமருது அது பரவுவர் அருவினை ஒருவுதல் பெரிதே? |
உரை |
1323. |
அரியொடு மலரவன் என இவர் அடி முடி தெரி வகை அரியவர், திருவடி தொழுது எழ, எரிதரும் உருவர்தம் இடைமருது அடைவு உறல் புரிதரும் மன்னவர் புகழ் மிக உளதே. |
உரை |
1324. |
குடை மயிலின தழை மருவிய உருவினர், உடை மரு துவரினர், பல சொல உறவு இலை; அடை மரு திருவினர் தொழுது எழு கழுலவர் இடை மருது என மனம் நினைவதும் எழிலே. |
உரை |
1325. |
பொருகடல் அடைதரு புகலியர் தமிழொடு விரகினன், விரிதரு பொழில் இடைமருதினைப் பரவிய ஒருபது பயில வல்லவர் இடர் விரவிலர், வினையொடு; வியன் உலகு உறவே. |
உரை |