தொடக்கம் | ||
123. திருவலிவலம் - திருவிராகம் - வியாழக்குறிஞ்சி
|
||
1326. |
பூ இயல் புரிகுழல்; வரிசிலை நிகர் நுதல்; ஏ இயல் கணை, பிணை, எதிர் விழி; உமையவள் மேவிய திரு உரு உடையவன்-விரைமலர் மா இயல் பொழில் வலிவலம் உறை இறையே. |
உரை |
1327. |
இட்டம் அது அமர் பொடி இசைதலின், நசை பெறு பட்டு அவிர் பவள நல்மணி என அணி பெறு விட்டு ஒளிர் திரு உரு உடையவன்-விரைமலர் மட்டு அமர் பொழில் வலிவலம் உறை இறையே. |
உரை |
1328. |
உரு மலி கடல் கடைவுழி உலகு அமர் உயிர் வெரு உறு வகை எழு விடம், வெளிமலை அணி கருமணி நிகர் களம் உடையவன்-மிடைதரு மரு மலி பொழில் வலிவலம் உறை இறையே. |
உரை |
1329. |
அனல் நிகர் சடை அழல் அவி உற என வரு புனல் நிகழ்வதும், மதி நனை பொறி அரவமும் என நினைவொடு வரும் இதும், மெல முடிமிசை மனம் உடையவர் வலிவலம் உறை இறையே. |
உரை |
1330. |
பிடி அதன் உரு உமை கொள, மிகு கரி அது வடிகொடு, தனது அடி வழிபடுமவர் இடர் கடி, கணபதி வர அருளினன்-மிகு கொடை வடிவினர் பயில் வலிவலம் உறை இறையே. |
உரை |
1331. |
தரை முதல் உலகினில் உயிர் புணர் தகை மிக, விரை மலி குழல் உமையொடு விரவு அது செய்து, நரை திரை கெடு தகை அது அருளினன்-எழில் வரை திகழ் மதில் வலிவலம் உறை இறையே. |
உரை |
1332. |
நலிதரு தரை வர நடை வரும் இடையவர் பொலிதரு மடவரலியர் மனை அது புகு பலி கொள வருபவன்-எழில் மிகு தொழில் வளர் வலி வரு மதில் வலிவலம் உறை இறையே. |
உரை |
1333. |
இரவணன் இருபதுகரம் எழில் மலைதனின் இரவணம் நினைதர அவன் முடி பொடி செய்து, இரவணம் அமர் பெயர் அருளினன்-நகநெதி இரவு அண நிகர் வலிவலம் உறை இறையே. |
உரை |
1334. |
தேன் அமர்தரு மலர் அணைபவன், வலி மிகும் ஏனம் அது ஆய் நிலம் அகழ் அரி, அடி முடி தான் அணையா உரு உடையவன்-மிடை கொடி வான் அணை மதில் வலிவலம் உறை இறையே. |
உரை |
1335. |
இலை மலிதர மிகு துவர் உடையவர்களும், நிலைமையில் உணல் உடையவர்களும், நினைவது தொலை வலி நெடுமறை தொடர் வகை உருவினன்- மலை மலி மதில் வலிவலம் உறை இறையே. |
உரை |
1336. |
மன்னிய வலி வல நகர் உறை இறைவனை, இன் இயல் கழுமல நகர் இறை எழில் மறை தன் இயல் கலை வல தமிழ் விரகனது உரை உன்னிய ஒருபதும் உயர்பொருள் தருமே. |
உரை |