தொடக்கம் | ||
125. திருச்சிவபுரம் - திருவிராகம்
|
||
1348. |
கலை மலி அகல் அல்குல் அரிவைதன் உருவினன், முலை மலிதரு திரு உருவம் அது உடையவன், சிலை மலி மதில் பொதி சிவபுரநகர் தொழ, இலை, நலி வினை; இருமையும் இடர் கெடுமே. |
உரை |
1349. |
படர் ஒளி சடையினன், விடையினன், மதில் அவை சுடர் எரி கொளுவிய சிவன் அவன், உறை பதி திடல் இடு புனல் வயல் சிவபுரம் அடைய, நம் இடர் கெடும்; உயர்கதி பெறுவது திடனே. |
உரை |
1350. |
வரை திரிதர, அரவு அகடு அழல் எழ, வரு நுரை தரு கடல் விடம் நுகர்பவன்-எழில் திகழ் திரை பொரு புனல் அரிசில் அது அடை சிவபுரம் உரை தரும் அடியவர் உயர்கதியினரே. |
உரை |
1351. |
துணிவு உடையவர்; சுடுபொடியினர்; உடல் அடு பிணி அடைவு இலர்; பிறவியும் அற விசிறுவர் திணிவு உடையவர் பயில் சிவபுரம் மருவிய மணிமிடறனது அடி இணை தொழுமவரே. |
உரை |
1352. |
மறையவன், மதியவன், மலையவன், நிலையவன், நிறையவன், உமையவள் மகிழ் நடம் நவில்பவன், இறையவன்-இமையவர் பணிகொடு சிவபுரம் உறைவு என உடையவன், எமை உடையவனே. |
உரை |
1353. |
முதிர் சடை இளமதி நதிபுனல் பதிவுசெய்து, அதிர்கழல் ஒலிசெய, அருநடம் நவில்பவன்; எதிர்பவர் புரம் எய்த இணை இலி; அணை பதி சதிர் பெறும் உளம் உடையவர் சிவபுரமே. |
உரை |
1354. |
வடிவு உடை மலைமகள் சலமகள் உடன் அமர் பொடிபடும் உழை அதள் பொலி திரு உருவினன், செடி படு பலி திரி சிவன், உறை சிவபுரம் அடைதரும் அடியவர் அருவினை இலரே. |
உரை |
1355. |
கரம் இருபதும் முடி ஒருபதும் உடையவன் உரம் நெரிதர, வரை அடர்வு செய்தவன், உறை பரன் என அடியவர் பணிதரு, சிவபுர- நகர் அது புகுதல் நம் உயர்கதி அதுவே. |
உரை |
1356. |
“அன்று இயல் உருவு கொள் அரி அயன் எனுமவர் சென்று அளவிடல் அரியவன் உறை சிவபுரம்” என்று இரு பொழுதும் முன் வழிபடுமவர் துயர் ஒன்று இலர்; புகழொடும் உடையர், இவ் உலகே. |
உரை |
1357. |
புத்தரொடு அமணர்கள் அற உரை புற உரை வித்தகம் ஒழிகில; விடை உடை அடிகள் தம் இத் தவம் முயல்வு உறில், இறைவன சிவபுரம் மெய்த்தக வழிபடல் விழுமிய குணமே. |
உரை |
1358. |
புந்தியர் மறை நவில் புகலி மன் ஞானசம்- பந்தன தமிழ்கொடு, சிவபுரநகர் உறை எந்தையை உரைசெய்த இசை மொழிபவர், வினை சிந்தி முன் உற, உயர்கதி பெறுவர்களே. |
உரை |