தொடக்கம் | ||
130. திருஐயாறு - மேகராகக்குறிஞ்சி
|
||
1394. |
புலன் ஐந்தும் பொறி கலங்கி, நெறி
மயங்கி, அறிவு அழிந்திட்டு, ஐம் மேல் உந்தி, அலமந்த போது ஆக, "அஞ்சேல்!" என்று அருள் செய்வான் அமரும் கோயில் வலம் வந்த மடவார்கள் நடம் ஆட, முழவு அதிர, மழை என்று அஞ்சி, சிலமந்தி அலமந்து, மரம் ஏறி, முகில் பார்க்கும் திரு ஐயாறே. |
உரை |
1395. |
விடல் ஏறு படநாகம் அரைக்கு அசைத்து, வெற்பு
அரையன் பாவையோடும் அடல் ஏறு ஒன்று அது ஏறி, "அம் சொலீர், பலி!" என்னும் அடிகள் கோயில் கடல் ஏறித் திரை மோதிக் காவிரியின் உடன் வந்து கங்குல் வைகி, திடல் ஏறிச் சுரிசங்கம் செழு முத்து அங்கு ஈன்று அலைக்கும் திரு ஐயாறே. |
உரை |
1396. |
கங்காளர், கயிலாயமலையாளர்,
கானப்பேராளர், மங்கை- பங்காளர், திரிசூலப்படையாளர், விடையாளர், பயிலும் கோயில் கொங்கு ஆள் அப் பொழில் நுழைந்து, கூர்வாயால் இறகு உலர்த்தி, கூதல் நீங்கி, செங்கால் நல் வெண்குருகு, பைங்கானல் இரை தேரும் திரு ஐயாறே. |
உரை |
1397. |
ஊன் பாயும் உடைதலைக் கொண்டு ஊர் ஊரன்
பலிக்கு உழல்வார், உமையாள்பங்கர், தான் பாயும் விடை ஏறும் சங்கரனார், தழல் உருவர், தங்கும் கோயில் மான் பாய, வயல் அருகே மரம் ஏறி, மந்தி பாய் மடுக்கள் தோறும் தேன் பாய, மீன் பாய, செழுங்கமலமொட்டு அலரும் திரு ஐயாறே. |
உரை |
1398. |
நீரோடு கூவிளமும், நிலாமதியும், வெள்
எருக்கும், நிறைந்த கொன்றைத் தாரோடு, தண்கரந்தை, சடைக்கு அணிந்த தத்துவனார் தங்கும் கோயில் கார் ஓடி விசும்பு அளந்து, கடி நாறும் பொழில் அணைந்த கமழ் தார் வீதித் தேர் ஓடும் அரங்கு ஏறி, சேயிழையார் நடம் பயிலும் திரு ஐயாறே. |
உரை |
1399. |
வேந்து ஆகி, விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும்
நெறி காட்டும் விகிர்தன் ஆகி, பூந்தாம நறுங்கொன்றை சடைக்கு அணிந்த புண்ணியனார் நண்ணும் கோயில் காந்தாரம் இசை அமைத்துக் காரிகையார் பண் பாட, கவின் ஆர் வீதி, "தேம்தாம்" என்று, அரங்கு ஏறிச் சேயிழையார் நடம் ஆடும் திரு ஐயாறே. |
உரை |
1400. |
நின்று உலாம் நெடுவிசும்பில் நெருக்கி வரு
புரம் மூன்றும் நீள்வாய் அம்பு சென்று உலாம்படி தொட்ட சிலையாளி, மலையாளி, சேரும் கோயில் குன்று எலாம் குயில் கூவ, கொழும் பிரசமலர் பாய்ந்து வாசம் மல்கு தென்றலார் அடி வருட, செழுங் கரும்பு கண்வளரும் திரு ஐயாறே. |
உரை |
1401. |
அஞ்சாதே கயிலாயமலை எடுத்த அரக்கர்கோன்
தலைகள் பத்தும், மஞ்சு ஆடு தோள், நெரிய அடர்த்து, அவனுக்கு அருள்புரிந்த மைந்தர் கோயில் இஞ்சாயல் இளந் தெங்கின் பழம் வீழ, இள மேதி இரிந்து அங்கு ஓடி, செஞ்சாலிக்கதிர் உழக்கி, செழுங் கமல வயல் படியும் திரு ஐயாறே. |
உரை |
1402. |
மேல் ஓடி விசும்பு அணவி, வியன் நிலத்தை
மிக அகழ்ந்து, மிக்கு நாடும் மாலோடு நான்முகனும் அறியாத வகை நின்றான் மன்னும் கோயில் கோல் ஓட, கோல்வளையார் கூத்தாட, குவிமுலையார் முகத்தில் நின்று சேல் ஓட, சிலை ஆட, சேயிழையார் நடம் ஆடும் திரு ஐயாறே. |
உரை |
1403. |
குண்டாடு குற்று உடுக்கைச் சமணரொடு
சாக்கியரும் குணம் ஒன்று இல்லா மிண்டாடும் மிண்டர் உரை கேளாதே, ஆள் ஆமின், மேவித் தொண்டீர்! எண்தோளர், முக்கண்ணர், எம் ஈசர், இறைவர், இனிது அமரும் கோயில் செண்டு ஆடு புனல் பொன்னிச் செழு மணிகள் வந்து அலைக்கும் திரு ஐயாறே. |
உரை |
1404. |
அன்னம் மலி பொழில் புடை சூழ் ஐயாற்று
எம்பெருமானை, அம் தண் காழி மன்னிய சீர் மறை நாவன்-வளர் ஞானசம்பந்தன்-மருவு பாடல் இன் இசையால் இவைபத்தும் இசையுங்கால், ஈசன் அடி ஏத்துவார்கள் தன் இசையோடு அமருலகில் தவநெறி சென்று எய்துவார், தாழாது அன்றே! |
உரை |