1859. துயர் ஆயின நீங்கித் தொழும் தொண்டர்! சொல்லீர்
கயல் ஆர் கருங்கண்ணியொடும்(ம்) உடன் ஆகி,
இயல்புஆய் இரும்பூளை இடம்கொண்ட ஈசன்
முயல்வார் இருவர்க்கு எரி ஆகிய மொய்ம்பே?
9
உரை