முகப்பு
தொடக்கம்
1951.
விடம் மல்கு கண்டத்தான், வெள்வளை ஓர் கூறு
உடையான்,
படம் மல்கு பாம்பு அரையான், பற்றாதார் புரம் எரித்தான்,
நடம் மல்கும் ஆடலினான், நால்மறையோர் பாடலினான்,
கடம் மல்கு மா உரியான், உறை கோயில் கைச்சினமே.
2
உரை