அலை மல்கு தண்புனலும் பிறையும் சூடி, அங்கையில் கொலை மல்கு வெண் மழுவும் அனலும் ஏந்தும் கொள்கையீர்! சிலை மல்கு வெங்கணையால் புரம் மூன்றும் எரித்தீர்! திரு நல்லூர், மலை மல்கு கோயிலே கோயில் ஆக மகிழ்ந்தீரே.