2236. வாடல் தலைமாலை சூடி, புலித்தோல் வலித்து வீக்கி,
ஆடல் அரவு அசைத்த அம்மான் இடம்போலும் அம் தண்
                                                            சாரல்,
பாடல் பெடைவண்டு போது அலர்த்த, தாது அவிழ்ந்து,
                                                 பசும்பொன் உந்திக்
கோடல் மணம் கமழும் குன்று இடம் சூழ் தண்சாரல்
                                                     குறும்பலாவே.
3
உரை