2259. மாமலையாள் கணவன் மகிழ் வெங்குரு, மாப் புகலி, தராய்,
                                                 தோணிபுரம், வான்
சேம மதில் புடை திகழும் கழுமலமே, கொச்சை,
                                             தேவேந்திரன் ஊர், சீர்ப்
பூமகன் ஊர், பொலிவு உடைய புறவம், விறல் சிலம்பன்
                                                 ஊர், காழி, சண்பை
பா மருவு கலை எட்டு எட்டு உணர்ந்து, அவற்றின் பயன்
                                            நுகர்வோர் பரவும் ஊரே.
4
உரை