2265. மேல் ஓதும் கழுமலம், மெய்த்தவம் வளரும் கொச்சை,
                                    இந்திரன் ஊர், மெய்ம்மை
நூல் ஓதும் அயன் தன் ஊர், நுண் அறிவார் குரு, புகலி,
                                          தராய், தூ நீர்மேல்
சேல் ஓடு தோணிபுரம், திகழ் புறவம், சிலம்பன் ஊர்,
                                        செருச் செய்து அன்று
மாலோடும் அயன் அறியான் வண் காழி, சண்பை
                                  மண்ணோர் வாழ்த்தும் ஊரே.
10
உரை