2270. ஊர் மதியைக் கதுவ உயர் மதில் சண்பை, ஒளி மருவு
                                                   காழி, கொச்சை,
கார் மலியும் பொழில் புடை சூழ் கழுமலம், மெய்த்
                                       தோணிபுரம், கற்றோர் ஏத்தும்
சீர் மருவு பூந்தராய், சிரபுரம், மெய்ப் புறவம், அயன் ஊர்,
                                                       பூங் கற்பத்
தார் மருவும் இந்திரன் ஊர், புகலி, வெங்குரு கங்கை
                                                 தரித்தோன் ஊரே.
3
உரை