2371. பனி வளர் மாமலைக்கு மருகன், குபேரனொடு தோழமைக்
                                                    கொள் பகவன்,
இனியன அல்லவற்றை இனிது ஆக நல்கும் இறைவன்(ன்),
                                               இடம்கொள் பதிதான்
முனிவர்கள் தொக்கு, மிக்க மறையோர்கள் ஓமம் வளர்
                                                தூமம் ஓடி அணவி,
குனிமதி மூடி, நீடும் உயர் வான் மறைத்து நிறைகின்ற
                                                   கொச்சைவயமே.
5
உரை