2374. வண்டு அமர் பங்கயத்து வளர்வானும், வையம் முழுது
                                           உண்ட மாலும், இகலி,
"கண்டிட ஒண்ணும்" என்று கிளறி, பறந்தும், அறியாத
                                                சோதி பதிதான்
நண்டு உண, நாரை செந்நெல் நடுவே இருந்து; விரை
                                         தேரை போதும் மடுவில்
புண்டரிகங்களோடு குமுதம் மலர்ந்து வயல் மேவு
                                                கொச்சைவயமே.
9
உரை