2376. இறைவனை, ஒப்பு இலாத ஒளி மேனியானை, உலகங்கள்
                                                   ஏழும் உடனே
மறைதரு வெள்ளம் ஏறி வளர் கோயில் மன்னி இனிதா
                                                 இருந்த மணியை,
குறைவு இல ஞானம் மேவு குளிர் பந்தன் வைத்த
                                       தமிழ்மாலை பாடுமவர், போய்,
அறை கழல் ஈசன் ஆளும் நகர் மேவி, என்றும் அழகா
                                                 இருப்பது அறிவே.
11
உரை