2391. மதி நுதல் மங்கையோடு, வட பால் இருந்து மறை ஓதும்
                                                   எங்கள் பரமன்,
நதியொடு கொன்றை மாலை முடிமேல் அணிந்து, என்
                                           உளமே புகுந்த அதனால்
கொதி உறு காலன், அங்கி, நமனோடு தூதர், கொடு
                                             நோய்கள் ஆனபலவும்,
அதிகுணம் நல்ல நல்ல; அவை நல்ல நல்ல, அடியார்
                                                 அவர்க்கு மிகவே.
4
உரை