2409. எரி ஒரு வண்ணம் ஆய உருவானை எந்தை பெருமானை
                                                  உள்கி நினையார்,
திரிபுரம் அன்று செற்ற சிவன் மேய செல்வத் திரு
                                           நாரையூர் கைதொழுவான்,
பொரு புனல் சூழ்ந்த காழி மறை ஞானசம்பந்தன் உரை
                                            மாலைபத்தும் மொழிவார்,
திரு வளர் செம்மை ஆகி அருள் பேறு மிக்கது உளது
                                             என்பர், செம்மையினரே.
11
உரை