2421. துளி மண்டி உண்டு நிறம் வந்த கண்டன், நடம் மன்னு
                                                 துன்னு சுடரோன்,
ஒளி மண்டி உம்பர் உலகம் கடந்த உமைபங்கன், எங்கள்
                                                      அரன், ஊர்
களி மண்டு சோலை, கழனிக் கலந்த கமலங்கள் தங்கும்
                                                         மதுவின்
தெளி மண்டி உண்டு, சிறைவண்டு பாடு திரு முல்லை
                                                   வாயில் இதுவே.
1
உரை