2422. பருவத்தில் வந்து பயன் உற்ற பண்பன், அயனைப்
                                                படைத்த பரமன்,
அரவத்தொடு அங்கம் அவை கட்டி எங்கும் அரவிக்க
                                               நின்ற அரன், ஊர்
உருவத்தின் மிக்க ஒளிர்சங்கொடு இப்பி அவை ஓதம்
                                                  மோத வெருவி,
தெருவத்தில் வந்து, செழு முத்து அலைக் கொள் திரு
                                          முல்லை வாயில் இதுவே.
2
உரை